sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

குருவை மிஞ்ச முடியுமா?

/

குருவை மிஞ்ச முடியுமா?

குருவை மிஞ்ச முடியுமா?

குருவை மிஞ்ச முடியுமா?


ADDED : டிச 27, 2013 02:28 PM

Google News

ADDED : டிச 27, 2013 02:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு ஆஸ்ரமத்தில் இருந்த குருவுக்கு பிரதான சீடன் இருந்தான். குருவைச் சந்திக்க வருபவர்கள், அவருக்கு செய்யும் மரியாதையில் தனக்கு ஒரு பங்கு கூட செய்வதில்லையே என்ற ஏக்கம் அவனிடம் இருந்தது. ஒருநாள், குருவிடமே தனது எண்ணத்தைச் சொல்லி விட்டான்.

குரு அவனிடம், ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை எடுத்துவரும்படி சொன்னார். அவனும் எடுத்து வந்தான். ''இதில் என்ன இருக்கிறது?'' என சீடனிடம் கேட்டார்.

அவன் 'தண்ணீர் இருக்கிறது' என பதில் சொன்னான்.

''இப்போது தண்ணீரை கொட்டிவிட்டு வா!'' என்றார் அவனிடம்.

அவனும் அப்படியே செய்தான். ''இப்போது பாத்திரத்திற்குள் என்ன இருக்கிறது சொல்!'' என குரு கேட்க, ''ஒன்றுமில்லை,'' என்றான்.

குரு சிரித்தார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவரிடமே காரணம் கேட்டான்.

குரு அவனிடம், ''பஞ்சபூதங்கள் என்ன?' என்று கேட்டார்.

அவன் ''நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்,'' என வரிசையாக சொல்லி முடித்தான்.

''மகனே! பஞ்சபூதத்தில் ஒன்றான தண்ணீர் இந்த பாத்திரத்திற்குள் இருந்தபோது, அதை நீ சரியாகச் சொன்னாய். ஆனால், அது இல்லாத பாத்திரத்திற்குள் தற்போது காற்று இருக்கிறது.இது கூட உனக்கு தெரியவில்லையே?'' என்றார்.

குருவின் பார்வைக்கும், தனது பார்வைக்கும் வித்தியாசமிருப்பதை சீடன் உணர்ந்தான். தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டதைப் புரிந்து கொண்டு, பணிவுடன் நடக்க ஆரம்பித்தான்.






      Dinamalar
      Follow us