sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

நல்லவர்களை அவமதிக்காதீர்!

/

நல்லவர்களை அவமதிக்காதீர்!

நல்லவர்களை அவமதிக்காதீர்!

நல்லவர்களை அவமதிக்காதீர்!


ADDED : பிப் 17, 2017 11:20 AM

Google News

ADDED : பிப் 17, 2017 11:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரையை ஆட்சி செய்த குலபூஷண பாண்டியன் தற்பெருமை மிக்கவனாக இருந்தான். தான் மட்டுமே புத்திசாலி என்று கருதி, அந்தணர்களையும், சான்றோர்களையும் அவமதித்தான். எனவே அவர்கள் மன்னரைப் புறக்கணித்தனர்.

நல்லவர்களை மதிக்காத நாட்டில் மழைவளம் இருக்காது. பாண்டியநாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால், மக்கள் பிழைப்பு தேடி மற்ற நாடுகளுக்குச் சென்றனர்.

செய்வதறியாத மன்னன், மதுரை சுந்தரேஸ்வரரை வழிபாடு செய்தான்.

மன்னனின் கனவில் தோன்றிய சிவன், “குலபூஷணா! வேதம் ஓதும் அந்தணர்களையும், சான்றோர்களையும் அவமதித்த பாவத்தால் உன் நாட்டில் மழைவளம் குன்றியது. உன் தவறைத் திருத்திக் கொண்டால் மீண்டும் நாடு வளம் பெறும். இருப்பினும் மக்களின் துன்பம் தீர பொற்கிழி ஒன்றைத் தருகிறேன். அதில் தங்கக்காசுகள், அள்ள அள்ளக் குறையாமல் வந்து கொண்டேயிருக்கும்” என்றார்.

திடுக்கிட்டு விழித்த மன்னனின் எதிரில், ஒரு பொற்கிழி இருந்தது. சிவனருளை எண்ணி வியந்த மன்னன், அரியணையில் பொற்கிழியை வைத்து வழிபட்டான்.

அதிலிருந்த காசுகளை அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் தானம் அளித்தான்.

மன்னரின் மனமாற்றம் கண்ட அனைவரும் மகிழ்ந்தனர். நாட்டில் மழையும் பொழியத் தொடங்கியது.






      Dinamalar
      Follow us