sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அன்னதானத்தின் மகிமை

/

அன்னதானத்தின் மகிமை

அன்னதானத்தின் மகிமை

அன்னதானத்தின் மகிமை


ADDED : பிப் 17, 2017 11:19 AM

Google News

ADDED : பிப் 17, 2017 11:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடியாருக்குநல்லான் என்னும் பக்தரும், அவரது மனைவியும் சிவபக்தர்கள். விவசாயிகளான அவர்கள் சிவ பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வந்தனர்.

அவர்களின் புகழ் நாடெங்கும் பரவியது. இந்நிலையில் அவர்கள் வாழ்வில் சோதனை உருவானது.

வயலில் விளைச்சல் குறைந்தது. சிவனடியார்களுக்கு தானம் செய்ய முடியாமல் போனது. வறுமையில் சிக்கிய அவர்கள் கடன் வாங்கி அன்னதானப் பணியைத் தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில், யாரும் கடன் தர முன்வரவில்லை.

நல்லானும், அவரது மனைவியும் கூட பட்டினியில் வாடினர்.

'உயிர் துறப்பதே மேல்' என்று முடிவெடுத்து மதுரை சொக்கநாதர் முன் சென்று, உங்கள் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க இயலாமல் வாடும் எங்கள் உயிரை உம்மிடம் அர்ப்பணிக்கிறோம்” என்றனர்.

அப்போது சிவன் அசரீரியாக தோன்றி, “உங்கள் பக்தியின் மகிமையால், உங்கள் இல்லத்தில் உள்ள உலவாக்கோட்டை (நெல் சேமிக்கும் கோட்டை போன்ற களஞ்சியம்) எப்போதும் நிரம்பி வழியும். தர்மத்தைத் தொடருங்கள்,” என்றது.

மகிழ்ந்த அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குறைவின்றி அன்னதானம் செய்தனர்.






      Dinamalar
      Follow us