sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கல்வி ஒளி பிறந்தது!

/

கல்வி ஒளி பிறந்தது!

கல்வி ஒளி பிறந்தது!

கல்வி ஒளி பிறந்தது!


ADDED : டிச 02, 2014 12:28 PM

Google News

ADDED : டிச 02, 2014 12:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வியே மனிதனுக்கு ஒளி தருவது. நாம் கல்விக்காக சரஸ்வதியை வணங்குவது போல, வடமாநிலங்களில் காளியை வணங்குவார்கள்.

உஜ்ஜைனி நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒருவன், படிப்பறிவற்ற காரணத்தால் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டான்.

அவ்வூரில் இருந்த ஆசிரியர் ஒருவரிடம், அந்த நாட்டு இளவரசி கல்வி கற்று வந்தாள். இளவரசி என்ற இறுமாப்பினால், அவள் ஆசிரியரை மதிக்கவில்லை. ஆத்திரமடைந்த ஆசிரியர், அவளுக்கு தக்க பாடம் கற்பிக்க முடிவெடுத்தார். தந்திரமாக ஆடு மேய்க்கும் இளைஞனுக்கு இளவரசியை மணம் முடிக்க ஏற்பாடு செய்து விட்டார்.

திருமணத்திற்குப் பின், இளவரசிக்கு உண்மை தெரிந்து விட்டது. ஆனாலும், அவள் கலங்கவில்லை. அவள் ஆணவம் மிக்கவள் தான்! என்றாலும், அவளுக்கு காளி மீது அபார பக்தி இருந்தது. தன் கணவன் சிறந்த அறிவாளியாக விளங்க வேண்டும் என வேண்டி விரதமிருந்தாள். காளியின் மூல மந்திரத்தை ஜெபித்து வரும்படி கணவனிடம் கூறினாள். அவனும் மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தான். அவனது ஆழமான பக்தி கண்ட காளி உள்ளம் மகிழ்ந்தாள். நேரில் அவனுக்கு காட்சியளித்ததோடு, தன் திரிசூலத்தால் அவனுடைய நாவில் எழுதி அருள்புரிந்தாள். ஏதும் அறியாத அந்த ஆடு மேய்ப்பவன் எல்லாம் அறிந்தவனாகி, உலகம் போற்றும் மகாகவி காளிதாசராக மாறினார். போஜராஜனின் அரசவையில் தலைசிறந்த புலவராக விளங்கினார்.

தீபங்கள் ஏற்றும் கார்த்திகை நன்னாளில், அம்பாளையும் வணங்கி கல்வியென்னும் ஒளிவிளக்கைப் பெறுவோம்.






      Dinamalar
      Follow us