sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

வேலூர் பெயர்க்காரணம்

/

வேலூர் பெயர்க்காரணம்

வேலூர் பெயர்க்காரணம்

வேலூர் பெயர்க்காரணம்


ADDED : டிச 02, 2014 12:27 PM

Google News

ADDED : டிச 02, 2014 12:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லியக்கோடன் என்னும் மன்னன் முருக பக்தனாக இருந்தான். அறவழியில் ஆட்சி செய்த அம்மன்னன் மீது பொறாமை கொண்ட பகை மன்னர்கள் படையெடுத்து வருவதாக செய்தி வந்தது. அவன் கார்த்திகை நட்சத்திரம் தோறும் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அன்றும் கார்த்திகையாக இருக்கவே சிறப்பு பூஜையை முடித்து விட்டு படுக்கைக்குச் சென்றான்.

கனவில் தோன்றிய முருகன், ''நல்லியக்கோடா! யாமிருக்க பயமேன்! கேணியில் பூத்திருக்கும் தாமரை மலரே உனக்கு ஆயுதம்! வெற்றி உன் பக்கமே!'' என்று வாழ்த்தி மறைந்தார்.

கண் விழித்தான் மன்னன். பொழுது புலர்ந்ததும், தாமரைகள் பூத்திருக்கும் கேணிக்குச் சென்றான். அங்கிருந்த மலரைப் பறித்து பகைவர் மீது வீசியெறிந்தான். அது வேலாக மாறி பகைவர்கள் வந்த திசை நோக்கிப் புறப்பட்டது. செய்வதறியாமல் திகைத்த அவர்கள் புறமுதுகிட்டு ஓடினர். வேல் எறிந்து வென்ற ஊர் என்பதால், நல்லியக் கோடன் ஆட்சி செய்த ஊருக்கு 'வேலூர்' என்ற பெயர் வந்தது.

'திறல்வேல் நுதியில் பூத்தகேணி விறல்வேல் வென்றி வேலூர்' என்று இவ்வூர் பற்றி,

சிறுபாணாற்றுப்படை என்னும் தமிழ் இலக்கியம் கூறுகிறது. இந்த மன்னன் தான் பெற்ற வெற்றிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் பொன்னால் ஆன பதக்கம், ஆபரணங்களை முருகப்பெருமானுக்குச் சூட்டி மகிழ்ந்தான்.






      Dinamalar
      Follow us