sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அருள் தந்த அருகம்புல்

/

அருள் தந்த அருகம்புல்

அருள் தந்த அருகம்புல்

அருள் தந்த அருகம்புல்


ADDED : ஆக 26, 2014 04:10 PM

Google News

ADDED : ஆக 26, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுலபன் என்ற மன்னன் எருதாகவும், அவனது மனைவி சுபத்திரை மாடு மேய்க்கும் பெண்ணாகவும், மன்னனைக் காணவந்த அந்தணர் கழுதையாகவும் மாறும் வகையில் சாபம் பெற்றனர். இவர்கள் மூவரும் எதிர்பாராதவிதமாக சந்திக்க நேர்ந்தது. அன்று பெரும் காற்றும் மழையும் வீசியது. சுபத்திரை தனது மாடுகளுக்காக அருகம்புல் அறுத்து கட்டுகட்டி வைத்திருந்தாள். மழை அதிகரிக்கவே அங்கே உள்ள ஒரு விநாயகர் கோயிலில் அந்தப் பெண் ஒதுங்கினாள். அதே கோயிலில் மாடும் ஒதுங்கியது. சுபத்திரை அறுத்து வைத்திருந்த அருகம்புல்லைத் தின்றது. அதன் வாயிலிருந்து சில புற்கள் காற்றில் சென்று அங்கிருந்த விநாயகர் சிலை மீது விழுந்தன. மாடு புல்லைத் தின்னும் வேகத்தில் அருகில் நின்றிருந்த கழுதையை தள்ளிவிட்டது. கழுதை தனது பின்னங்காலால் மாட்டை உதைத்தது. அப்போது கால், அந்த புல்கட்டில் பட்டு மேலும் சில அருகம்புற்கள் விநாயகர் மீது விழுந்தன. தான் கஷ்டப்பட்டு அறுத்து வந்த புல்லை மாடும், கழுதையும் சேர்ந்து துவம்சம் செய்வதை கண்ட சுபத்திரை, இரண்டையும் அடித்து விரட்டி விட்டு, புல்கட்டை தூக்கினாள். அப்போது சிதறிய மேலும் சில புற்கள் விநாயகர் மீது விழுந்தன. இவ்வாறு மூவரிடமிருந்தும் புற்கள் பறந்து விநாயகர் சிலை மீது விழுந்ததால், மூவரும் சாபவிமோசனம் அடைந்தனர்.

சிதறிய புற்களே சாப விமோசனம் அளிக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை என்றால், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், நம் பாவங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சாய் காணாமல் போய்விடும் என்பதில் சந்தேகமென்ன!






      Dinamalar
      Follow us