sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அடிச்சா கை வலிக்குமே!

/

அடிச்சா கை வலிக்குமே!

அடிச்சா கை வலிக்குமே!

அடிச்சா கை வலிக்குமே!


ADDED : மார் 12, 2014 02:09 PM

Google News

ADDED : மார் 12, 2014 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதி, தன் குருவாக, விரஜானந்தரை ஏற்றிருந்தார். விரஜானந்தருக்கு பார்வை இல்லாததால், சீடரான தயானந்தர் குருவுக்கு பணிவிடை செய்து வந்தார்.

விரஜானந்தர் தினமும் யமுனை நதியில் நீராட விரும்புவார். ஆனால், அங்கு சென்று வருவது சிரமமாக இருந்தது. எனவே, யமுனை நீரை 12 குடம் எடுத்து வந்து, குருவை குளிப்பாட்டுவார் தயானந்தர். மேலும், குரு தங்கும் இடத்தை சுத்தப்படுத்தவும் செய்வார்.

ஒருநாள், அவரைக் குளிப்பாட்டி விட்டு, வீட்டை சுத்தம் செய்தார். ஆனால், ஒரு பக்கத்தில் இருந்த குப்பையை கவனிக்காமல் விட்டு விட்டார். பார்க்கும் சக்தி இல்லாத விரஜானந்தரின் கால், குப்பை மீது இடறி விட்டது.

கோபம் தலைக்கேறியது. தயானந்தரின் முதுகில்'பளார்..பளார்..' என முடிந்த மட்டும் அறைந்தார்.

''குருவே! தயவு செய்து முதுகில் என்னை அடிக்காதீர்கள்! எனக்கு வலிக்கும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. எத்தனையோ முறை உங்களிடம் அடி வாங்கியதால் என் முதுகு மரத்துப் போய் விட்டது. மரத்த இடத்தில், என்னை அடிக்கும் போது, தங்களின் கை வலிக்குமே!'' என்று சொல்லி வருந்தினார்.

தயானந்தரின் குருபக்தி கண்ட விரஜானந்தர், அதன் பின் சீடரை அடிப்பதை விட்டு விட்டார்.






      Dinamalar
      Follow us