sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

புண்ணியக் கணக்கு

/

புண்ணியக் கணக்கு

புண்ணியக் கணக்கு

புண்ணியக் கணக்கு


ADDED : பிப் 25, 2022 10:31 AM

Google News

ADDED : பிப் 25, 2022 10:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சி ன்ன ஓட்டல் ஒன்றில் கையில் துாக்குவாளியுடன் வந்தாள் ஒரு சிறுமி, ''அம்மா பத்து இட்லி வாங்கி வரச் சொன்னாங்க... காசு நாளைக்குத் தருவாங்களாம். அண்ணா!'' என்றாள். ஓட்டல் நடத்துபவர்,''உங்க கணக்கில் நிறைய பாக்கி இருக்கு... அம்மாக்கிட்டே சொல்லுமா... இப்போ வாங்கிட்டுப் போ...'' என்றார்.

இட்லி பார்சலையும், துாக்குவாளியையும் கொடுத்தனுப்பினார்.

''சரி... அம்மாவிடம் சொல்றேன்... போயிட்டு வரேன் அண்ணா'' என சிறுமி கிளம்பினாள்.

அந்தக் கடையில் சாப்பிட வந்த இளைஞன் இதைப் பார்த்து விட்டு, ''நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க'' எனக் கேட்டான்.

''அட... சாப்பாடு தானே சார்... குழந்தைகள் கேட்கும் போது மறுக்க மனசு வரல.. பாவம் குழந்தை பசியால் அழுதிருக்கும்... அதான் சார், குழந்தையை அனுப்பி இருக்காங்க. அவங்க நம்பிக்கையை பொய்யாக்க நான் விரும்பல...

உழைச்சி சம்பாதிக்கிற காசு இது... வந்துடும்... ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல, அதுபோதும். உணவு தரவில்லை என்றால் தாய்க்காக குழந்தை திருடப் போகும் அல்லது குழந்தையின் பசி போக்க தாய் தவறான பாதைக்கு செல்வாள். ஆனால் நான் நஷ்டப்பட்டாலும், நடக்க இருந்த இரண்டு தவறுகளைத் தடுத்த மகிழ்ச்சி போதும்'' என விளக்கம் கொடுத்தார் ஓட்டல் நடத்துபவர்.

உன்னிப்பாக கேட்டார் இளைஞர். மீண்டும் ஓட்டல் நடத்துபவர், ''எனக்கும் இந்த விஷயத்தில் அனுபவம் உண்டு. என் இளமைப்பருவத்தில் புட்டு விற்கும் பாட்டியிடம் இதே போல கடன் சொல்லி அவ்வப்போது பசியாறுவேன். அப்போது

'ஏன் பாட்டி, நான் பணம் தராமல் ஓடிவிட்டால் என்ன செய்வாய்' என்று கேட்டேன். அதற்கு அவர், ''அட போப்பா, பணம் வந்தால் லாபக் கணக்கு. பணம் தராவிட்டால் அது என் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும்' என சிரித்தார்'' என்றார்.

இதுதான் நம் இந்திய பண்பாடு!

இனியாவது அன்னதானம் செய்யுங்கள்.






      Dinamalar
      Follow us