sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

எப்படி தெரிந்தது இவருக்கு?

/

எப்படி தெரிந்தது இவருக்கு?

எப்படி தெரிந்தது இவருக்கு?

எப்படி தெரிந்தது இவருக்கு?


ADDED : அக் 14, 2014 04:03 PM

Google News

ADDED : அக் 14, 2014 04:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் இருந்து ஐந்து பேராசிரியர்கள் புதுச்சேரியிலுள்ள பல்கலைக் கழகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் காஞ்சிப்பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தரிசிப்பதற்காக சங்கர மடத்திற்கு வந்தனர். அவர்களில் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள்.

வந்தவர்கள் அனைவரும் பெரியவர் முன் அமர்ந்து தங்களின் பெயர்களையும், அவர்களின் துறை சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் பேராசிரியை ஒருவரிடம் பெரியவர்,''நீங்கள் இத்தாலியில் இருந்து வந்தவரா?'' என்று கேட்டார் பெரியவர்.

அந்தப் பெண்மணி பிரான்சின் பாரிஸ் நகரைச் சேர்ந்தவர். ஆனால், இவர் இத்தாலி என்று குறிப்பிடுகிறாரே? ஏன் என்று ஒரு கணம் குழம்பியவர், சற்று யோசனைக்குப் பின், ''என் பெற்றோர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்'' என்றார்.

பெரியவர் மீண்டும் அந்த பெண்ணிடம், ''உங்கள் பெற்றோர் பாரீஸின் வடக்கிலுள்ள 'லுக்ஸ்ம்பர்க்கை' சேர்ந்தவர்கள் தானே!'' என்று கேட்டார். இதைக் கேட்டதும் அந்த பெண் ஆச்சரியத்தில் ஆடிப்போனார். உடன் வந்தவர்களைப் பார்த்தபடியே, 'ஆமாம்' என்று தலையசைத்தார்.

இதற்கு முன்னர் இந்தியாவிற்கே வந்திராத அந்த பெண்ணைப் பற்றி, மற்றவர்களுக்கே இந்த விஷயம் இப்போது தான் தெரிந்தது.

இத்தாலி நாட்டினருக்கும், பாரிஸின் வடக்கிலுள்ள லுக்ஸ்ம்பர்க் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தலைமுடி கருப்பாக இருக்கும். அவர்கள் லத்தீன் பேசும் விதமும் பிரெஞ்சுக்காரர்களிடம் இருந்து மாறுபடும் என்பதை காஞ்சிப்பெரியவர் அவர்களுக்கு விளக்கினார்.

உலகின் எந்த பாகத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்கள் என்ன மொழி பேசினாலும், அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு பேசும் கலை காஞ்சிப்பெரியவருக்கே உரிய தனிச்சிறப்பு என்றால் மிகையில்லை.






      Dinamalar
      Follow us