sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அன்று மழை பெய்தது இன்று மணல் கூட இல்லை!

/

அன்று மழை பெய்தது இன்று மணல் கூட இல்லை!

அன்று மழை பெய்தது இன்று மணல் கூட இல்லை!

அன்று மழை பெய்தது இன்று மணல் கூட இல்லை!


ADDED : ஆக 10, 2014 06:03 PM

Google News

ADDED : ஆக 10, 2014 06:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை அருகிலுள்ள கூவம் என்ற தலத்தில் (கூவம் என்றால் நீர்நிலை, கிணறு என பொருள்) வசித்தவர் நாரணர். பெரிய கொடை வள்ளல்.

இவ்வூரில், பலரிடமும் நன்கொடை பெற்று சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யும் அடியவர் ஒருவரும் இருந்தார். ஒருமுறை, நாரணரிடம் வந்து, ''ஐயனே! இன்னும் பத்துநாளில் குருபூஜை வருகிறது. என் இல்லத்துக்கு பல சிவனடியார்களும் விருந்துக்கு வருகிறார்கள். அந்நாளில், தங்களிடம் வந்து விறகு பெற்றுச் செல்கிறேன்.

தருவீர்களா!'' என்றார். வள்ளல் அவரிடம், ''இத்தகைய தானத்தில் என் பங்களிப்பும் இருந்திட அருள் செய்த தங்களுக்கு நன்றி. விறகு அந்நாளில் நிச்சயம் கிடைக்கும், வாருங்கள்,'' என்றார்.

அன்றுமுதல் கடும் மழை பெய்து விறகு ஈரமாகி விட்டது. அடியவர் குறிப்பிட்ட நாளில் வந்து விறகு கேட்டார். வள்ளல் சற்றும் யோசிக்கவில்லை. தன் வீட்டை இடிக்க ஆரம்பித்து விட்டார்.

வீட்டிலுள்ள உத்தரம், குறுக்கு கட்டைகள், கதவுகளைப் பிரித்து தருவதாகக் கூறினார். ஆனால், அடியவர் இதைத் தடுத்தார்.

வேண்டாம் ஐயா! இதற்குப் போய் வீட்டை இடிக்கிறீர்களே! நான் எப்படியோ சமாளித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

அதற்கு அந்த வள்ளல்,''ஐயா! இந்த வீடு போனால் போகிறது. இன்னொரு வீடு கட்டிக்கொள்வேன். ஆனால், கொடுத்த வாக்கை உயிர் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும்<,'' என்றார்.

இப்படிப்பட்ட வள்ளல்களும், நியாயஸ்தர்களும், நல்லவர்களும் வாழ்ந்ததால் தான் அன்று மழை பெய்தது. இன்று ஆறுகளில் மணல் கூட இல்லை.






      Dinamalar
      Follow us