sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கும்பகோணம் உருவான கதை

/

கும்பகோணம் உருவான கதை

கும்பகோணம் உருவான கதை

கும்பகோணம் உருவான கதை


ADDED : பிப் 16, 2022 10:31 AM

Google News

ADDED : பிப் 16, 2022 10:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னொரு காலத்தில் வெள்ளத்தால் உலகம் அழியும் நிலை ஏற்பட்டது. அப்போது சிவனிடம், “உலகம் அழிந்து மீண்டும் தோன்றியதும், படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது'' என பிரம்மா கேட்டார். “நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்று செய்து அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆதாரமான சிருஷ்டி பீஜத்தை (படைப்புக்குரிய மூலப்பொருள்) அதனுள் வை. அதன் மீது தேங்காயை வைத்து, மாவிலையால் அலங்காரம் செய். அது வெள்ளத்தில் சாயாமல் இருக்க ஒரு உறியில் வை. வெள்ளத்தில் கும்பம் தெற்கு நோக்கி செல்லும். அந்த புனித தலத்தில் நான் எழுந்தருள்வேன்” என்றார் சிவன்.

இதன்படியே வெள்ளத்தில் மிதந்த கும்பம் ஓரிடத்தில் தங்கியது. கும்பத்திலிருந்து விழுந்த மாவிலை வன்னி மரமாயிற்று. அப்போது வேடனாக தோன்றிய சிவன் கும்பத்தின் மீது அம்பு தொடுத்தார். கும்பத்தின் மூக்கு சிதைந்து, அமுதம் நாலாபுறமும் பரவியது. அமுதத்தோடு கலந்த வெண்மணல் சிவலிங்கம் ஆயிற்று. இவரே 'கும்பேஸ்வரர்' என்றும், இத்தலம் 'கும்பகோணம்' என்றும் பெயர் பெற்றது. மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று கும்பகோணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசிமகம் விழா அங்கு கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us