sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சாஸ்திரத்தை நம்புங்க!

/

சாஸ்திரத்தை நம்புங்க!

சாஸ்திரத்தை நம்புங்க!

சாஸ்திரத்தை நம்புங்க!


ADDED : ஜூலை 29, 2013 05:10 PM

Google News

ADDED : ஜூலை 29, 2013 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு திருடன் காவலர்களிடம் சிக்கிக் கொண்டான். அவனை விசாரிக்க அரண்மனை நீதிசபை கூடியது. அரசர் நீதிபதியாக இருந்தார்.

வழக்கறிஞர் அரசரிடம்,''இந்த திருடனிடம் அவன் திருடியதற்கான காரணம் பற்றி விசாரித்தேன். அவன் நல்ல பணியில் இருந்தான். ஏதோ சூழ்நிலையில் வேலையை இழந்து விட்டான். குடும்ப வறுமை காரணமாக அவன் திருடியிருக்கிறான். அவனை விட்டு விடுவதே முறையானது,'' என்று வாதிட்டார்.

அரசுத்தரப்பு வழக்கறிஞர் எழுந்தார்.

''அரசே! திருடனுக்காக வாதிட்டவர் பேசுவது தர்மப்படி போல தோன்றலாம். ஆனால், சட்டப்படி நியாயமல்ல. ஒருவன் திடீரென வேலை இழந்தால், வேறு வேலையைத் தான் தேட வேண்டும். கூலி வேலை செய்தேனும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். திருட்டில் இறங்குபவர் யாராயினும் தண்டிக்கப்பட வேண்டியவரே!'' என்று வாதிட்டார்.

அரசரும் அவரது வாதத்தை ஏற்று திருடனுக்கு தண்டனை விதித்தார். இதுபோல் தான், சாஸ்திரங்கள் பல கட்டுப்பாடுகளை மனிதனுக்கு விதித்துள்ளன. அது பழசு என்பதற்காக அதிலுள்ள நியாயங்களை ஒதுக்கி விடக்கூடாது. சாஸ்திர வல்லுநர்களை 'பழைய பஞ்சாங்கம்' என்று ஒதுக்கக்கூடாது. சாஸ்திர சம்பிரதாயங்களிலுள்ள நியாயங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது மனிதனின் கடமை.






      Dinamalar
      Follow us