ADDED : மே 08, 2021 03:14 PM

* பக்தியுடன் இரு. ஆனால் மூடத்தனத்திற்கு இடம் தராதே.
* கடவுளை வெளியுலகத்தில் தேடுவது அறியாமை.
* கடவுளிடம் சரணடைந்தால் பாவத்தில் இருந்து விடுபடலாம்.
* பசுவைத் தேடும் கன்றாக கடவுளைக் காண மனம் ஏங்க வேண்டும்.
* பக்தி இல்லாமல் புனித யாத்திரை செல்வதில் அர்த்தமில்லை.
* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு துணை நிற்கும்.
* அமைதியாக இருப்பதே ஞானத்தின் அடையாளம்.
* கடவுளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என யாருமில்லை.
* கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது.
* ஆணவம் இருக்கும் வரை கடவுளை நாம் நெருங்க முடியாது.
* பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் அம்சமே.
* எந்த நிலையிலும் கலங்காதவனே உண்மையான ஞானி.
* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே உண்மையையே உணர்த்துகின்றன.
* ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கடவுளை அணுகாதே.
* முழு நம்பிக்கையுடன் கடவுளின் திருவடியில் சரணடைந்திடு.
அறிவுறுத்துகிறார் வள்ளலார்