ADDED : மே 08, 2021 03:14 PM

* எப்போதும் உண்மை பேசுங்கள்.
* நற்செயலில் மட்டும் ஈடுபடுங்கள்.
* கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்.
* அன்பு, அருள், இரக்கம் கொண்டவன் தெய்வீக இயல்பை பெறுகிறான்.
* கடவுளை வணங்காவிட்டால் அருள் உணர்வு இல்லாமல் போகும்.
* ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர்.
* பசித்தவருக்கு உணவளிப்பதோடு உதவியும் செய்யுங்கள்.
* முற்பிறவியின் புண்ணியத்தால் தான் மனிதப்பிறவி கிடைத்துள்ளது.
* கற்கண்டை ருசித்தவன் கருங்கல்லை விரும்பாதது போல கடவுளை அறிந்தவன் மற்றதை விரும்ப மாட்டான்.
* எல்லாம் வல்ல கடவுளை அறிந்தால் கவலை, துன்பம் நேராது.
* கையில் ஜபமாலையும், வாயில் மந்திரமும் இருந்தால் போதுமா... கடவுளை மனம் நாட வேண்டும்.
* வஞ்சகர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதீர்!
* நல்லோர் மனம் நடுங்கும் விதத்தில் செயல்படக் கூடாது.
* தானம் கொடுப்பவரை ஒருபோதும் தடுக்காதீர்.
எச்சரிக்கிறார் ராமகிருஷ்ணர்