sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

குழந்தைகளின் நலனுக்கு...

/

குழந்தைகளின் நலனுக்கு...

குழந்தைகளின் நலனுக்கு...

குழந்தைகளின் நலனுக்கு...


ADDED : மார் 20, 2025 01:24 PM

Google News

ADDED : மார் 20, 2025 01:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலருக்கு குழந்தைப்பேறு கிடைத்தாலும், ஜாதகத்தில் பாலாரிஷ்ட தோஷம் இருந்தால் குழந்தைகளின் ஆயுள், உடல்நலத்திற்கு குறைவு ஏற்படலாம். இக்குறையைப் போக்கும் தலமாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் வாழ்ந்த சித்தர்கள் சிலர் மதுரை சுந்தரேஸ்வரர் மீது பக்தி கொண்டிருந்தனர். அவர்கள் தவமிருந்த வனப்பகுதியான இங்கு சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டனர். அதையே சுந்தரேஸ்வரராக கருதி வழிபடத் தொடங்கினர். பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டு மீனாட்சியம்மனுக்கும் சன்னதி அமைக்கப்பட்டது. சித்தர்கள் தனக்கென வீடுவாசல் இல்லாததால் 'ஆண்டிகள்' என அழைக்கப்படுவர். அதனால் இப்பகுதி 'ஆண்டிபட்டி' எனப் பெயர் பெற்றது.

ஏழு நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இக்கோயிலில் சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். சூரியனும் சந்திரனும் அருகருகே இங்குள்ளதால் அமாவாசை மட்டுமில்லாமல் ஆண்டின் எல்லா நாட்களிலும் இங்கு பிதுர் தர்ப்பணம் செய்கின்றனர்.

சுவாமி, அம்மன் சன்னதிக்கு நடுவில் முருகனுக்கு சன்னதி இருப்பதால் இக்கோயில் 'சோமஸ்கந்த தலம்' எனப்படுகிறது. மூவரையும் வழிபட்டால் கைலாய மலையை தரிசித்த புண்ணியம் சேரும். இங்கு தட்சிணாமூர்த்திக்கு அருகில் சப்த ரிஷிகள் என்னும் ஏழு முனிவர்கள் அமர்ந்து உபதேசம் கேட்கின்றனர்.

இங்குள்ள சந்தான விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட மழலை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷம் தீர பெற்றோர்கள் சுவாமி, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

சிவனாண்டி சித்தரின் ஜீவசமாதி இங்குள்ளது. நோயால் அவதிப்படுபவர்கள் இவரது சன்னதியில் தரப்படும் விபூதியை பூசுகின்றனர். எதிரி தொல்லை தீரவும், முயற்சியில் வெற்றி கிடைக்கவும் வெள்ளி அன்று வேல் பூஜை நடக்கிறது.

எப்படி செல்வது: மதுரை - தேனி செல்லும் வழியில் 60 கி.மீ.,

விசேஷ நாள்: வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:30 - 8:30 மணி

தொடர்புக்கு: 99527 66408, 94435 01421

அருகிலுள்ள கோயில்: தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் 8 கி.மீ., (வெற்றிக்கு...)

நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மதியம் 3:00 - 6:00 மணி






      Dinamalar
      Follow us