sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

விபத்தை தடுக்க...

/

விபத்தை தடுக்க...

விபத்தை தடுக்க...

விபத்தை தடுக்க...


ADDED : மார் 14, 2025 08:58 AM

Google News

ADDED : மார் 14, 2025 08:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமிதேவியை அரசுரனிடம் இருந்து மீட்ட பெருமாள் கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராகபெருமாளாக இருக்கிறார். இவரை வழிபட்டால் விபத்து ஏற்படாது.

பூமாதேவியை கடத்தி சென்று பாதாள உலகில் மறைத்து வைத்தான் அசுரன் இரண்யாட்சன். இதைக் கண்டு வெகுண்ட பெருமாள் ஒற்றை கொம்புள்ள பன்றியாக உருவெடுத்து அசுரனைக் கொன்றார். பூமாதேவியை தன் கொம்பில் சுமந்து வந்து முன்பிருந்த நிலையில் நிலைபெறச் செய்தார். அதன்பின் பூலோகத்தில் ஸ்ரீமுஷ்ணத்தை இருப்பிடமாக்கி பூவராகப்பெருமாள் என்னும் பெயரில் கோயில் கொண்டார். ' பூ' என்றால் பூமி. 'வராகன்' என்றால் பன்றி முகம் உள்ளவர். மேற்கு நோக்கிய கோலத்தில் காட்சி தரும் இவரது முகம் தெற்கு நோக்கி உள்ளது.

சாளக்கிராம கல்லால் ஆன சுயம்பு மூர்த்தியாக எட்டுத்தலங்களில் பெருமாள் அருள்புரிகிறார். அவை ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாச்ரமம், ஸ்ரீமுஷ்ணம். இங்கு அசுரனை வென்ற பெருமிதத்துடன் கைகளை இடுப்பில் வைத்தபடி முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக நிற்கிறார் பூவராகர். தாயாரின் திருநாமம் அம்புஜவல்லி.

இங்குள்ள குழந்தையம்மன் சன்னதியில் தாயாரின் தோழியர் உள்ளனர். உற்ஸவரின் திருநாமம் யக்ஞ வராகமூர்த்தி. அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, ஆதிவராக மூர்த்தி, கண்ணன் ஆகியோர் உள்ளனர். விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் இது. இங்குள்ள தீர்த்தம் நித்ய புஷ்கரணி. பூவராக பெருமாளை வழிபட்டால் வாக்கு வன்மை, செல்வம், குழந்தைப்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் கிடைக்கும். குரு, ராகு, கேது தோஷம் விலகும்.

வாகனம் வாங்கியதும் பூவராகரை தரிசித்தால் பயணம் இனிதாகும். இதை 'வாகனம் படைத்தல்' என்கின்றனர்.

எப்படி செல்வது

* விருத்தாச்சலத்திலிருந்து 24 கி.மீ.,

* சிதம்பரத்தில் இருந்து 35 கி.மீ.,

விசேஷ நாள்: சித்திரை பிரம்மோற்ஸவம், சித்திரை ரேவதி நட்சத்திரத்தன்று பூவராக ஜெயந்தி, தமிழ் மாதப்பிறப்பன்று நரசிம்மர் புறப்பாடு, வைகுண்ட ஏகாதசி

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 94431 81679

அருகிலுள்ள கோயில்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் 24 கி.மீ., (தொழில் வளர்ச்சிக்கு...)

நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 04143 - 230 203






      Dinamalar
      Follow us