sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பணியில் அக்கறையுடன் ஈடுபடு

/

பணியில் அக்கறையுடன் ஈடுபடு

பணியில் அக்கறையுடன் ஈடுபடு

பணியில் அக்கறையுடன் ஈடுபடு


ADDED : அக் 26, 2018 09:04 AM

Google News

ADDED : அக் 26, 2018 09:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதையும் அலட்சிய எண்ணத்துடன் அணுகாதே. சிறிய விஷயமாக இருந்தாலும் அதில் அக்கறையுடன் ஈடுபடு.

* அறிவு,அழகு,பணம் இவற்றால் மனிதன் ஆணவம் கொள்ளக் கூடாது. எல்லாம் கடவுளின் கருணை அன்றி வேறில்லை.

* உழைக்க இரு கைகள், சிந்தித்து வாழ நல்ல புத்தியை கடவுள் அளித்திருக்கிறார். அதன் மூலம் நற்செயலில் ஈடுபடு.

* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் மனம் துாய்மையுடன் இருக்கும்.

* எதையும் அனுபவத்தால் அறிய வேண்டும் என்பதில்லை. பெரியவர்களின் அறிவுரைக்கு செவி சாய்த்தாலே அனுபவஅறிவு கிடைத்து விடும்.

* பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகவே திரும்பும்.

* பூமியை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.

* புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் 'நான்' என்னும் ஆணவம் கூடாது.

* வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்தால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.

* பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.

* எளிமை, உழைப்பு இரண்டும் மனிதனை மனநிறைவோடு இருக்க வழிகாட்டும் நற்பண்புகள்.

* மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே அமைகிறது.

வலியுறுத்துகிறார் காஞ்சிப்பெரியவர்






      Dinamalar
      Follow us