sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தர்மத்தாய் ஜூவாலாமுகி

/

தர்மத்தாய் ஜூவாலாமுகி

தர்மத்தாய் ஜூவாலாமுகி

தர்மத்தாய் ஜூவாலாமுகி


ADDED : ஜன 17, 2021 06:32 PM

Google News

ADDED : ஜன 17, 2021 06:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது சாமுண்டீஸ்வரியம்மன் கோயில் தான். அவளின் தங்கை ஜுவாலாமுகிக்கும் கோயிலும் இருக்கு. உங்களுக்கு தெரியுமா... கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அருகிலுள்ள உத்தனஹள்ளியில் கோயில் உள்ளது.

ரத்த பீஜாசுரன் என்னும் அசுரனுடைய உடம்பில் இருந்து வெளி வரும் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அசுரர்கள் தோன்றினர். இதனைப் பயன்படுத்தி தேவர்களைத் துன்புறுத்தினான் அசுரன். ரிஷிகள் நடத்திய யாகங்களைத் தடுத்தான். அனைவரும் உலகத்தின் தாயான பார்வதியிடம் முறையிட்டனர். உக்ர ரூபத்துடன் நாக்கை நீட்டிய படி, கோரைப் பற்களுடன் 'ஜுவாலாமுகி' என்ற திருநாமத்தோடு பார்வதி புறப்பட்டாள். அசுரனுடன் போரிட்டு அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை குடித்தாள். அநீதியை அழித்து தர்மத்தைக் காக்கும் தாயாக இங்கு இருக்கிறாள்.

சாமுண்டி மலையை அடுத்த குன்றில் சுயம்புவாக புற்றில் இருந்து வெளிப்பட்ட நிலையில் அம்மன் காட்சியளிக்கிறாள். மிகச் சிறிய வாசலுடன் குகை போல சன்னதி உள்ளது. நாக்கை நீட்டிய படியே கோபத்தோடு காட்சி தரும் அம்மனின் கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், பாணம் என்னும் ரத்தம் குடிக்கும் பாத்திரம் உள்ளன. உற்ஸவ அம்மனின் முகம் சாந்தநிலையில் உள்ளது. தங்கையான ஜுவாலாமுகியை தரிசித்த பின்னரே சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி வழிபட நாகதோஷம் விலகும். பவுர்ணமியன்று வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவையை நிவேதனம் செய்து எலுமிச்சை தீபமேற்றினால் திருமணத்தடை நீங்கும். ஜுவாலாமுகி சன்னதியை ஒட்டி சிவபெருமானின் சன்னதி உள்ளது. அசுர வதம் செய்த பாவம் நீங்க, அம்பிகை இங்கு சிவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள். சித்தத்தை (அறிவு) தெளிவாக்குபவர் என்பதால் 'சித்தேஸ்வரர்' என்றும், ராமர் வழிபட்ட சிவன் என்பதால் ராமநாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர், நாக பைவரர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் உத்தனஹள்ளி

விசஷே நாள்: ஆடி பவுர்ணமி, நவராத்திரி, மகாசிவராத்திரி, சனி பிரதோஷம்

நேரம்: காலை 7:30 - மதியம் 2:00 மணி மதியம் 3:00 - இரவு 9:00 மணி

தொடர்புக்கு : 089645 71235

அருகிலுள்ள தலம்: மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்(12 கி.மீ.,)

நேரம்: காலை 7:30 - மதியம் 2:00 மணி மதியம் 3:30 - இரவு 9:00 மணி

தொடர்புக்கு: 0821 - 259 0027






      Dinamalar
      Follow us