sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஒழுக்கம் ஒருவனை உயர்த்தும்

/

ஒழுக்கம் ஒருவனை உயர்த்தும்

ஒழுக்கம் ஒருவனை உயர்த்தும்

ஒழுக்கம் ஒருவனை உயர்த்தும்


ADDED : செப் 27, 2019 10:30 AM

Google News

ADDED : செப் 27, 2019 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தனி மனித ஒழுக்கம் தான் ஒருவனை உயர்த்தும்.

* எல்லா உயிர்களையும் நேசியுங்கள். அவற்றின் பசி போக்க உணவிடுங்கள்.

* கடவுள் வழிபாட்டை தனக்கென செய்யாமல் பிறருக்காகவும் செய்யுங்கள்.

* உடலுக்கு உயிர் போல உலகிற்கும் கடவுள் ஒருவரே.

* ஜீவ காருண்யத்தை கடை பிடித்தால் மட்டுமே கடவுளின் அருள் கிடைக்கும்.

* கடவுளின் திருவடியை மனம் ஒன்றி வணங்குங்கள்.

* மனதிற்குள் ஒன்றும், வெளியில் ஒன்றுமாக பேசுபவர்களிடம் உறவு கொள்ளாதீர்கள்.

* உற்சாகத்துடன் பணியில் ஈடுபட்டால் பாதியளவு பணி முடித்ததற்கு சமம்.

* சோம்பல், பொய், தீய சொற்களை பேசுதல், பொறாமை போன்ற குணங்களை கைவிடுங்கள்.

* பிரார்த்தனையுடன் புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். கடவுள் அருள் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.

* உலகிலுள்ள எல்லா உயிர்களும் நம் உடன் பிறப்புகளே.

* கீழ்த்தரமான எண்ணத்தை விட்டு விடுங்கள். கடவுள் மீது தளராத நம்பிக்கை கொள்ளுங்கள்.

* உலகம் சிற்றின்பத்தில் நாட்டமுடன் இருக்கிறது. நம் வாழ்க்கை முறை தவறானது என்பதை உணர வேண்டும்.

* நாம் மனிதப்பிறவி எடுத்ததே கடவுளின் அருள் பெறவே. விடாமுயற்சியுடன் அவரருளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

* எல்லா உயிர்களிடமும் அன்பும், கருணையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அன்பே நம்மிடம் கடவுளை கொண்டு வந்து சேர்க்கும்.

* எல்லா உயிர்களும் தன்னுயிராக கருதினால் முகத்தில் இன்ப ஒளி சுடர் விட்டு பிரகாசிக்கும். அதில் எல்லா உயிர்களும் மகிழ்ச்சி பெறும்.



சொல்கிறார் வள்ளலார்






      Dinamalar
      Follow us