sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மகாராணியாக வாழ ஆசையா...

/

மகாராணியாக வாழ ஆசையா...

மகாராணியாக வாழ ஆசையா...

மகாராணியாக வாழ ஆசையா...


ADDED : பிப் 19, 2023 01:40 PM

Google News

ADDED : பிப் 19, 2023 01:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோகுலத்தின் மகாராஜாவாக போற்றப்படும் கிருஷ்ணரின் மனதைக் கொள்ளை கொண்டவள் ராதா. வைஷ்ணவ சம்பிரதாயத்தின்படி மகாலட்சுமியின் அவதாரமாக கருதப்படும் இவரை 'ராதா ராணி' என்கிறார்கள். இவளின் தாயாரான கீர்த்தி மாயாவின் கோயில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பர்சானா நகரில் உள்ளது. இங்கு தீபமேற்றினால் மகாராணியாக வாழும் பேறு உண்டாகும்.

கோபியர் பலரும் கிருஷ்ணரை விரும்பினாலும், அவரின் மனதில் முதலிடம் பிடித்தவள் ராதாராணி மட்டுமே. நண்பர்களான கிருஷ்ணரின் தந்தை நந்தகோபரும், ராதாவின் தந்தையும் அடிக்கடி சந்திப்பது வழக்கம். இந்நிலையில்தான் கிருஷ்ணர், ராதாவுக்கும் காதல் மலர்ந்தது.

கிருஷ்ணரின் காதலியான ராதா பிறந்த தலம் கோகுலத்திற்கு அருகிலுள்ள பர்சானா. இங்கு ராதாவின் தாயான கீர்த்திமாயாவின் கோயில் உள்ளது. இதை கட்டியவர் துறவி கிருபால்ஜி மஹராஜ். இங்கு தாயின் மடியில் சிறுகுழந்தையாக சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் ராதா இருக்கிறாள். இடதுபுறத்தில் சீதாதேவியுடன் ராமரும், வலதுபுறத்தில்

ராதையுடன் கிருஷ்ணரும் நின்ற கோலத்தில் உள்ளனர். 'கீர்த்தி மந்திர்' எனப்படும் இங்கு தரிசிப்பவர்கள் செல்வம், புகழ் மிக்க வாழ்வு பெறுவர்.

சிவப்பு நிறக் கற்களால் உருவாக்கப்பட்ட ரங்கீலி என்னும் மஹால் கோயிலுக்கு அருகில் உள்ளது. ஒரே நேரத்தில் மூவாயிரம் பக்தர்கள் பஜனை நடத்தும் மண்டபம் இது. இங்கு அழகான ஆர்ச் வேலைப்பாடுகளும், பூவேலைப்பாடு மிக்க துாண்களும், சலவைக்கல் தரைத்தளமும் காண்போரை கவர்ந்திழுக்கும். இருபுறங்களிலும் ராதா, கிருஷ்ணர் சுதைச்சிற்பங்கள் நுாற்றுக்கணக்கில் உள்ளன. 2019ல் வசந்த பஞ்சமியன்று இக்கோயில் திறக்கப்பட்டது. தினமும் மதியம் 12:00 மணி, இரவு 7:30 மணிக்கு ஆரத்தி நடக்கும். இங்குள்ள தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் ராதாகிருஷ்ண லீலைகளை விளக்கும் பொம்மைச் சிற்பங்கள் உள்ளன. இரவில் கோயில் மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கிறது. இங்கு இலவச மருத்துவமனை உள்ளது.

எப்படி செல்வது: மதுராவில் இருந்து 53கி.மீ.,

விசேஷ நாள்: ராதாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி

நேரம்: காலை 8:30 - 12:00 மணி; மாலை 4:30 - 8:00 மணி

தொடர்புக்கு: 088824 80000

அருகிலுள்ள தலம்: ராதாராணி கோயில் 3 கி.மீ.,

நேரம்: அதிகாலை 5:00 - 2:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி

தொடர்புக்கு: 099992 94729






      Dinamalar
      Follow us