
* பேராசையால் நற்குணம் நம்மை விட்டு விலகும்.
* பொறுமையைக் கடைபிடிப்பவனே சிறந்த மனிதன்.
* அடக்கமுடன் வாழ்ந்தால் மறுபிறவியிலும் நன்மை கிடைக்கும்.
* பாவத்திற்கான தண்டனை பெறாமல் சொர்க்கம் செல்ல முடியாது.
* முன்யோசனையுடன் பேசினால் மதிப்பு உயரும்.
* தன்னுயிர் போல எல்லா உயிரையும் நேசியுங்கள்.
* கோபம் அன்பை அழிக்கும். பொறாமை அனைத்தையும் அழிக்கும்.
* இகழ்ந்து பேசினாலும் கோபம் கொள்ளாதவரே அறிவாளி.
* பாவச்செயல்கள் துன்பத்தை தரும்.
* மனத்துாய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி.
* புல்லில் விழும் பனி போல வாழ்க்கை நிலையற்றது.
* உண்மை பேசுபவன் பெற்ற தாய் போல நம்பத் தகுந்தவன்.
* செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனச்சுமை தீரும்.
* ஏமாற்றுதல் என்பது சிறிய முள்; அதை அகற்றுவது கடினம்.
* மவுனமாக இருக்கப் பழகினால் மனம் கலங்காத நிலை பெறும்.
* நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு வராது. நல்ல அறிவின்றி ஒழுக்கம் வாய்க்காது.
* அகிம்சையே அனைத்திலும் மேலான தர்மம்.
எச்சரிக்கிறார் மகாவீரர்