ADDED : அக் 05, 2020 07:08 PM

அக்.5 - பிறந்த தினம்
* ஆடம்பரமாக உடுத்தக் கூடாது.
* நடுநிலை தவறாமல் மனிதன் வாழ வேண்டும்.
* தன்னை அறிய முயல்வதே மேலான இன்பம்.
* கடவுளை தாழ்த்தியோ மனிதனை உயர்த்தியோ பேசுவது கூடாது.
* குறையே இல்லாத புகழ் கடவுளுக்கு மட்டுமே உண்டு.
* கடவுளின் புகழ் பாடினால் வாய் கூட மணக்கும்.
* கோபம் வந்தால் மவுனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
* நோயற்ற வாழ்வைப் பெற வழிபாடு செய்யுங்கள்.
* கோயில் வழிபாட்டால் உடல், உள்ளம் குளிரும்.
* உலகம் நலம் பெற முடிந்த நல்லதை செய்யுங்கள்
* தவறு செய்ய வேண்டாம். மீறி செய்தால் திருத்திக் கொள்ளுங்கள்.
* இன்பத்திலும், துன்பத்திலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
* பெற்றோரே உங்களின் முதல் தெய்வங்கள்.
* பொது நோக்கத்துடன் செயலில் ஈடுபடுங்கள்.
* உத்தமர்களுடன் விரும்பி நட்பு பாராட்டுங்கள்.
* உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதீர்கள்.
* பிறரது குற்றங்களை ஒருபோதும் கவனிக்காதீர்கள்.
உபதேசிக்கிறார் வள்ளலார்