ADDED : அக் 05, 2020 07:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள்.
* தர்மம் ஒன்றே பிறவிக்கடலை தாண்ட உதவும் தோணி.
* தேவையற்றதை பேசுவதோ கேட்பதோ கூடாது.
* தர்மம் இருக்குமிடத்தில் கடவுள் இருக்கிறார்.
* கடவுளின் திருநாமத்தை எப்போதும் ஜபியுங்கள்.
* தர்மவழியில் வாழ்வதே கல்வி கற்றதன் அடையாளம்
* நல்ல வழியில் பணம் சம்பாதித்து பிறருக்கு உதவுங்கள்.
* அலை பாயும் மனதை அடக்கியாளக் கற்றுக் கொள்ளுங்கள்.
* கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
* உண்மையை உணர்ந்தவர்கள் அடக்கமுடன் நடப்பர்.
* அறிவுக்கு எதிராகவே ஆசை செயல்படுகிறது
* கோபத்தை கைவிட்டவரை துன்பம் நெருங்குவதில்லை.
* கவர்ச்சியைக் கண்டு மயங்கக் கூடாது.
* உயிர் உள்ள வரை பிறவிக்குணம் நீங்குவதில்லை.
* அடக்கமுடன் வாழ்ந்தால் மோட்சம் உண்டு.
சொல்கிறார் வியாசர்