ADDED : ஜன 22, 2021 02:22 PM

* அதிக நேரம் துாங்குவது நல்லதல்ல.
* உதவி கேட்டு வருவோருக்கு முடிந்ததை செய்யுங்கள்.
* உங்களின் வசதிற்கு ஏற்ப தானம், தர்மம் செய்யுங்கள்.
* இன்பமாகத் தோன்றி பிறகு துன்பம் தரும் பழக்கங்களுக்கு இடம் தராதீர்.
* நல்ல செயல்களை முன் நின்று நடத்துங்கள்.
* படித்த நுாலுக்கு ஏற்ப ஒருவனின் புத்திக்கூர்மை வெளிப்படும்.
* கருணையே ஆன்மிகத்தின் ஆணிவேர்.
* சோர்வுடன் பேசினால் அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்காது.
* நல்வழி காட்டும் நல்லவரோடு பழகுங்கள்.
* மற்றவர்களின் உள்ளக் குறிப்பறிந்து செயல்படுபவனே புத்திசாலி.
* வறுமையை விடக் கொடியது இளமையில் வறுமை.
* தர்மம் ஒன்றே வாழ்வுக்கு பின்னும் துணையாக வரும்.
* எந்தச் செயலையும் அதற்குரிய காலத்திற்குள் செய்ய வேண்டும்.
* நல்ல மனைவி அமைந்தால் குடும்பம் கோயிலாக இருக்கும்.
* செல்வம் மிக்க குடும்பத்தில் பிறப்பதை விட ஒழுக்கமுடன் வாழ்வது மேல்.
* பாலைத் தரும் பசு போல பிறருக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்.
* அறிஞர்கள் சென்ற இடம் எல்லாம் அனைவராலும் மதிக்கப்படுவர்.
* விஷமுள்ள பாம்பு போல தீயவர்கள் மறைந்து வாழ விரும்புவர்.
எச்சரிக்கிறார் அவ்வையார்