
* பெற்றோரின் பேச்சை புறக்கணிப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
* இரக்கம் கொண்ட இதயத்தில் தெய்வம் குடியிருக்கும்.
* புறம் பேசி மற்றவர் குடும்பத்தில் கலகம் உண்டாக்காதீர்.
* உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவோரின் உறவு கூடாது.
* நீதி, நேர்மையை பின்பற்றி நடப்பவர்களே உயர்ந்த மனிதர்கள்.
* எளிய உயிர்களுக்கும் உதவி செய்வதே உயர்ந்த பண்பு.
* மன ஒருமையுடன் பக்தியில் ஈடுபடும் உத்தமர் உறவை நாடுங்கள்.
* எந்தச் சூழலிலும் உண்மை ஒருவனுக்கு பாதுகாப்பு அளிக்கும்.
* நல்ல எண்ணம் இருந்தால் மட்டுமே ஒழுக்கமுடன் வாழ முடியும்.
* நல்லோர் மனம் நடுங்கச் செய்வதும், தானம் செய்வதை தடுப்பதும் பெரும் பாவம்.
* மாமிசம் சாப்பிட்டு உடலை வளர்ப்பவன் இழிநிலைக்கு ஆளாவான்.
* கடவுளுக்காக செலவழிக்க விரும்பினால் ஏழைகளுக்கு உதவுங்கள்.
* பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமல் உங்களின் தவறை திருத்துங்கள்.
* ஏழைகளின் பசியை போக்கினால் கடவுளின் உள்ளம் குளிரும்.
* பிறருக்கு மட்டுமின்றி தனக்கும் கோபம் தீமையே செய்கிறது.
* அனைவரும் கல்வி கற்க வேண்டும்.
* பசியை பொறுப்பதை விட உயிர்களை கொல்லாமல் இருப்பது சிறந்தது.
வழிகாட்டுகிறார் வள்ளலார்