ADDED : பிப் 19, 2023 01:34 PM

பிப்.5 - ஸித்தி தினம்
* எல்லாம் கடவுளின் செயல் என்று அறிந்தால் துன்பம் வராது.
* பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே.
* நீ செய்த புண்ணியத்தால் உனக்கு மனித பிறவி கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்து.
* நல்லவர்களின் மனதை புண்படுத்தாதே.
* உண்மையை பேசு. உனது வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
* ஜாதி, மதம், நாடு என யாரையும் பிரித்துப் பார்க்காதே.
* அன்பு, இரக்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தால் கடவுள் உனக்கு அருள்புரிவார்.
* மரங்களை அழிக்காதே.
* மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றும் இணைந்த நிலையில் கடவுளை வழிபடு.
* எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு.
* நல்லதை பேசி புண்ணியத்தை தேடு.
* பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே.
* 'எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்' என கடவுளிடம் வேண்டிக்கொள்.
* பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு. இதுவே தர்மத்தில் சிறந்தது.
* பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே.
என்கிறார் வள்ளலார்

