/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நல்ல காலம் வரும்! உன் கடமை வரும்
/
நல்ல காலம் வரும்! உன் கடமை வரும்
ADDED : செப் 22, 2023 10:30 AM

* உனக்கேற்ற நல்ல காலம் வரும். அப்போது தான் முயற்சியில் வெற்றி பெறுவாய். அதுவரை பொறுமையாக இரு.
* வாழ்க்கை என்றால் இன்பம், துன்பம் இருக்கத்தான் செய்யும். அதை கடந்து செல்.
* கேட்கும் விஷயங்கள் அனைத்தும் உண்மை என்று நம்பாதே.
* நீ செய்யும் செயல்கள் அனைத்தும், நிழல்போல உன்னை தொடரும்.
* மனதில் இருப்பதை சொல். இல்லாவிட்டால் மவுனமாக இரு.
* ஒரு விஷயத்தை யார் சொல்கிறார் என்பதைவிட, அவர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம்.
* பிறரிடம் உள்ள குறைகளை பார்க்காதே. உன்னிடம் உள்ள குறைகளை கவனி.
* உன்னை நேசிக்க கற்றுக்கொள். பிறரை வெறுக்கமாட்டாய்.
* எண்ணத்தால் கூட பிறருக்கு தீங்கு செய்ய நினைக்காதே.
* நல்ல மனிதனாக வாழ்ந்தால் இயற்கையே உனக்கு துணை நிற்கும்.
* ஆசையே துன்பத்திற்கு காரணம். முடிந்தவரை அதை தவிர்த்திடு.
* உலகில் எப்போதும் உண்மை ஒன்றே நிலைத்திருக்கும்.
* தன்னிடம் உள்ள அதிகாரத்தால் காரியம் சாதிப்பவன் நல்ல மனிதனாகவோ, நீதிமானாகவோ இருக்க முடியாது.
* எதிரிக்கும் நல்லதை செய். உனக்கு நன்மை வரும்.
* அதிகமாகப் பேசுவதால் மட்டுமே நீ அறிஞனாக முடியாது.
* தக்க சமயத்தில் உனக்கு உதவி செய்பவனே நண்பர்களில் சிறந்தவன்.
* மனதை கட்டுப்படுத்து. இல்லையென்றால் அது உன்னை கட்டுப்படுத்தும்.
என்கிறார் புத்தர்