ADDED : செப் 08, 2017 09:38 AM

* தெய்வீக சக்தியை நோக்கி மனதை திருப்பி விட்டால், வாழ்வில் இன்று முதல் ஆனந்தத்தை உணரத் தொடங்கி விடுவீர்கள்.
* மற்றவர்களின் உடல் பலம், பணபலத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். வெற்றி நோக்குடன் எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொள்ளுங்கள்.
* புதிய முயற்சியில் ஈடுபடும் போது, கடந்த கால அனுபவம் கற்றுத் தந்த பாடத்தை மறக்காதீர்கள்.
* தோல்வி என்பது தற்காலிகமான ஒன்றே. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருப்பவனுக்கு வெற்றி கிடைத்தே தீரும்.
* கடவுளின் ஒப்பற்ற படைப்பாக இருக்கும் நம்மைப் போல வேறொருவர் உலகில் இல்லை. இதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள்.
* தினமும் இரவு தூங்கும் முன், அன்றைய நாளில் செய்த பணி அனைத்தையும் பட்டியலிடுங்கள். இது உங்களை திருத்திக் கொள்ளவும், பணி குறித்து திட்டமிடவும் தூண்டுகோலாக இருக்கும்.
* வேகத்துடன், விவேகத்தையும் மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே நெருக்கடி நேரத்தில் மனிதனுக்கு தக்க பாதுகாப்பாக அமையும்.
சொல்கிறார் பரமஹம்ச யோகானந்தர்