ADDED : ஏப் 06, 2023 09:26 AM

மார்ச் 28 - நினைவு நாள்
* தேவைகளை குறைத்தால் நிம்மதியான வாழ்க்கை அமையும்.
* மனத்தை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
* உணவில் எளிமை, உழைப்பில் கடுமை, ஒழுக்கத்தில் உயர்வு என்பதே உத்தமர் இயல்பு.
* பணத்திற்கும், பண்பிற்கும் நடக்கும் போட்டியில், பண்பை காப்பாற்ற உறுதி வேண்டும்.
* மனதில் உருவாகும் ஒழுங்கற்ற எண்ணமே உனக்கு முதல் எதிரி.
* ஆசையை அடியோடு ஒழிக்க வேண்டாம், அதை சீரமைத்தாலே போதும்.
* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு.
* எந்த நிலையிலும் கோபம் வராவிட்டால், ஞானம் பெற்றதாக அர்த்தம்.
* கற்பு என்பது உயிரினும் மேலான ஒழுக்கம்.
* பயமே கொடிய நோயான கவலையை உண்டாக்குகிறது.
* கடமை தவறாதவர்களே கடவுள் மீது உண்மையான பக்தி செலுத்த முடியும்.
* நேர்மையும், உண்மையும் கொண்டவர்களுக்கு வரும் துன்பம் தற்காலிகமானதே.
* பிறரை வாழ்த்தினால் பகைமை மறையும்.
* மனம் என்னும் விளைநிலத்தில், நல்ல எண்ணத்தை விதை.
* பிறரை வாழ்த்தும் போது நம்மைச் சுற்றி நல்ல அலைகள் உருவாகும்.
வழிகாட்டுகிறார் வேதாத்ரி

