sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உடலுண்டு உள்ளம் உண்டு! முன்னேறு மேலே மேலே!

/

உடலுண்டு உள்ளம் உண்டு! முன்னேறு மேலே மேலே!

உடலுண்டு உள்ளம் உண்டு! முன்னேறு மேலே மேலே!

உடலுண்டு உள்ளம் உண்டு! முன்னேறு மேலே மேலே!


ADDED : பிப் 19, 2014 02:36 PM

Google News

ADDED : பிப் 19, 2014 02:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிப்., 21 ஸ்ரீ அன்னை பிறந்த நாள்!

* கொழுந்து விட்டெரியும் நெருப்பாக இருங்கள். வாழ்வில் எதிர்ப்படும் ஒவ்வொரு நிகழ்வும் நமது முன்னேற்றத்திற்கு உதவுவதற்காகவே என்று எண்ணுங்கள்.

* உங்கள் செயல்கள் மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்கட்டும். ஆனால், உங்களுக்குடைய சொந்த மகிழ்ச்சிக்காக எதையும் செய்யாதீர்கள்.

* பரபரப்பு, கலகம், பதட்டம் இவற்றைத் தவிர்த்து விடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் பூரண அமைதியைக் கடைபிடியுங்கள்.

* பிறரிடம் காணப்படும் குறைகளை மாற்றும் ஆற்றல் உங்களிடம் இருந்தால் அன்றி, யாரையும் குறை சொல்ல முயலாதீர்கள்.

* உங்கள் முன் வைத்திருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். உடலாலும், மனதாலும் அதைநோக்கி முன்னேறும் விதத்தில் செயல்படுங்கள்.

* முன்னேறுவதற்காகவே நாம் பூமியில் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறாவிட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகி விடும்.

* சொற்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மிக அவசியம் இருந்தால் ஒழிய பேச வேண்டாம்.

* தளராத முயற்சி உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும். அதன் மூலம் இறை அருளாகிய திவ்ய ஒளி உங்கள் மீது படும்.

* உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர், தலைவர் என்பதை உணருங்கள்.

* உள்ளத்து உறுதியும், பெருமித உணர்வும் கொண்டு உங்கள் பாதையில் நடைபோடுங்கள்.

* எப்போதும் நல்லதையே எண்ணி செயல்படுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

* அச்சம் நோயை விட பயங்கரமானது. ஆபத்தும் கொண்டது. அதுவே உங்களிடமிருந்து களையப்பட வேண்டிய முதல் குறைபாடு.

* நேர்மை, பொறுமை, வலிமை இவற்றைப் பயன்படுத்தி அச்சத்தின் நிழல் கூட இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

* அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்கட்டும். எதிர்மறையான விஷயங்களைக் கைவிடுங்கள். எங்கும் கடவுளின் அருட்காட்சியை மட்டும் காணுங்கள்.

* உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களைச் சுற்றிலும் அமைதி, நம்பிக்கை, மகிழ்ச்சி மிக்க சூழ்நிலையை உருவாக்க முயலுங்கள்.

* எந்த சூழ்நிலையிலும் கடவுளின் பக்கம் நில்லுங்கள். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் உண்மையை கைவிட்டு விடாதீர்கள்.

உண்மைக்காக போராடுவதே உண்மையான வீரம்.

* உழைப்பே கடவுளுக்கு மிகவும் விருப்பமான பிரார்த்தனை. ஒருபோதும் மனிதன் மற்றவர் உழைப்பில் வாழ முற்படுவது கூடாது.

* துணிவுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கையைக் கை கொள்ளுங்கள். வாழ்க்கை என்னும் சுரங்கப்பாதையின் முடிவில், வெற்றி என்னும் பேரொளி நமக்காக காத்திருக்கிறது.

* எந்த நிலையிலும் கடவுளின் உதவியை பெற கற்றுக் கொள்ளுங்கள். அது அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.

உற்சாகப்படுத்துகிறார் ஸ்ரீ அன்னை






      Dinamalar
      Follow us