/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஊருக்கே வாழ்ந்து உயர்பவன் புனிதன்!
/
ஊருக்கே வாழ்ந்து உயர்பவன் புனிதன்!
ADDED : ஜூலை 13, 2018 10:16 AM

ஜூலை 14 - சிவானந்தர் நினைவு தினம்
* தர்ம வழியில் வாழ்வு நடத்தினால் ஒவ்வொரு நாளும் இனிய நாளாகவே இருக்கும்.
* துன்பம் என்பது இறைவனின் வரப்பிரசாதம். அது அவனது கருணைக்கு அடையாளம்.
* உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்
* உண்மையான துறவியால் தான் பணத்தின் மயக்கத்தை எதிர்த்து நிற்க முடியும்.
* ஆன்மிகத்தின் மூலமாகவே பழைய கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியும்.
* பணத்தாசை பிடித்த மனிதர்களை எப்போதும் நம்ப முடியாது.
* கடவுளின் திருவடியில் நம் ஆசைகள் அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதே நல்லது. நமக்கு எது தேவையோ அதை அவர் கொடுக்கட்டும்.
* துாய்மையான மனம் உடையவர்கள் கண்ணுக்கு அனைத்தும் துாய்மையாகவே தெரியும்.
* ஒருவன் தியானத்தில் வெற்றி பெறும் பொழுது அனைத்திலும் வெற்றி பெறுகிறான்.
* தியானத்தில் மனம் நிலைத்து விட்ட பிறகு யாருடனும் பேசிப் பழகலாம். அதனால் மனதிற்கு ஒரு குறையும் உண்டாகாது.
* தினமும் பிரார்த்தனை செய்யும் வழக்கமுடையவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவர்.
நல்வழிப்படுத்துகிறார் இமயஜோதி