sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

/

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே


ADDED : நவ 27, 2020 01:32 PM

Google News

ADDED : நவ 27, 2020 01:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.23 - பிறந்த நாள்

* இரவும், பகலும் போல துன்பமும், இன்பமும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.

* உணவை வீணாக்காமல் இருப்பது அன்னதானத்திற்கு சமம்.

* ஆணவம் துளியளவு இருந்தாலும் கடவுளை அடைய விடாமல் நம்மை தடுக்கும்.

* அறிவுள்ளவர்கள் அடக்கமுடன் இருப்பர். இல்லாதவரே அலட்டிக் கொள்வர்.

* சொல்வது எளிது. சொல்லியபடி நடப்பது மிக கடினம்.

* பொருள் வேண்டி வழிபடுவதை விட, கடவுளின் அருள் வேண்டி வழிபடுவது சிறந்தது.

* பிறர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதையே நாமும் செய்ய வேண்டும்.

* அறிவும் மானமும் பங்காளிகள். ஒன்றை ஒன்று எப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கும்.

* அன்பு என்னும் துளிரில் இருந்து சேவை என்னும் மொட்டு வளர்ந்து பக்தியாக மலர்கிறது.

* அன்பு என்னும் விளக்கு அணைந்தால் பொறாமை என்னும் இருள் சூழும்.

* கடவுளை அடைய மிக எளிய வழி பிறர் மீது அன்பு செலுத்துவதே.

* எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தை என்பதை உணர்ந்தால் உலகம் அன்புமயமாகும்.

* பொருள் இல்லாதவன் ஏழை அல்ல. ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.

* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் இருக்கிறார். அவரை விட்டு உயிர் வாழ முடியாது.

* பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுள் நாமமே இன்பம்.

* கடவுளை நினைக்கும் மனம் தேனை மட்டும் அருந்தும் தேனீ போன்றது.

* கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல. நல்ல குணங்களை கற்பதே.

* பொன்னை இழந்தால் திரும்பப் பெறலாம். காலம் போனால் போனதுதான்.

* யாசகம் கேட்பதை விட இல்லை என மறுப்பவன் இழிந்தவன்.

* கடவுளிடம் மனஅமைதியை வேண்டுங்கள். இதுவே நியாயமான பிரார்த்தனை.

* சுயநலமற்ற சேவையில் ஈடுபடுங்கள். அதுவே மகிழ்ச்சிக்கான வழி.

* பிறரது கருத்துக்கு மதிப்பளியுங்கள். மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.

* பூமிக்கு வரும் போது எதையும் கொண்டு வரவுமில்லை. போகும் போது கொண்டு போவதுமில்லை.

* கடவுள் வாழும் வீடாக உடலைக் கருதுங்கள். அதை துாய்மையுடன் வைத்திருங்கள்.

* பட்டம், பதவிக்காக அலையாதீர்கள். அது தானாகவே தேடி வர வேண்டும்.

* அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது.

* இயற்கை அழகில் ஈடுபடுங்கள். அதன் ஒழுங்குமுறை, நேர்த்தி, கம்பீரத்தை போற்றுங்கள்.

* கடவுளை ஆராயக் கூடாது. நம்பிக்கை, ஆழ்ந்த அன்பு இருந்தால் அவரை அடையலாம்.

* எங்கும் நிறைந்த தெய்வீகத்தை காண்பதற்காகவே கண்கள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன.

தைரியமூட்டுகிறார் சாய்பாபா






      Dinamalar
      Follow us