ADDED : நவ 27, 2020 01:32 PM

நவ.23 - பிறந்த நாள்
* இரவும், பகலும் போல துன்பமும், இன்பமும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.
* உணவை வீணாக்காமல் இருப்பது அன்னதானத்திற்கு சமம்.
* ஆணவம் துளியளவு இருந்தாலும் கடவுளை அடைய விடாமல் நம்மை தடுக்கும்.
* அறிவுள்ளவர்கள் அடக்கமுடன் இருப்பர். இல்லாதவரே அலட்டிக் கொள்வர்.
* சொல்வது எளிது. சொல்லியபடி நடப்பது மிக கடினம்.
* பொருள் வேண்டி வழிபடுவதை விட, கடவுளின் அருள் வேண்டி வழிபடுவது சிறந்தது.
* பிறர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதையே நாமும் செய்ய வேண்டும்.
* அறிவும் மானமும் பங்காளிகள். ஒன்றை ஒன்று எப்போதும் எதிர்த்துக் கொண்டிருக்கும்.
* அன்பு என்னும் துளிரில் இருந்து சேவை என்னும் மொட்டு வளர்ந்து பக்தியாக மலர்கிறது.
* அன்பு என்னும் விளக்கு அணைந்தால் பொறாமை என்னும் இருள் சூழும்.
* கடவுளை அடைய மிக எளிய வழி பிறர் மீது அன்பு செலுத்துவதே.
* எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தை என்பதை உணர்ந்தால் உலகம் அன்புமயமாகும்.
* பொருள் இல்லாதவன் ஏழை அல்ல. ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.
* ஒவ்வொரு அணுவிலும் கடவுள் இருக்கிறார். அவரை விட்டு உயிர் வாழ முடியாது.
* பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுள் நாமமே இன்பம்.
* கடவுளை நினைக்கும் மனம் தேனை மட்டும் அருந்தும் தேனீ போன்றது.
* கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது அல்ல. நல்ல குணங்களை கற்பதே.
* பொன்னை இழந்தால் திரும்பப் பெறலாம். காலம் போனால் போனதுதான்.
* யாசகம் கேட்பதை விட இல்லை என மறுப்பவன் இழிந்தவன்.
* கடவுளிடம் மனஅமைதியை வேண்டுங்கள். இதுவே நியாயமான பிரார்த்தனை.
* சுயநலமற்ற சேவையில் ஈடுபடுங்கள். அதுவே மகிழ்ச்சிக்கான வழி.
* பிறரது கருத்துக்கு மதிப்பளியுங்கள். மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.
* பூமிக்கு வரும் போது எதையும் கொண்டு வரவுமில்லை. போகும் போது கொண்டு போவதுமில்லை.
* கடவுள் வாழும் வீடாக உடலைக் கருதுங்கள். அதை துாய்மையுடன் வைத்திருங்கள்.
* பட்டம், பதவிக்காக அலையாதீர்கள். அது தானாகவே தேடி வர வேண்டும்.
* அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது.
* இயற்கை அழகில் ஈடுபடுங்கள். அதன் ஒழுங்குமுறை, நேர்த்தி, கம்பீரத்தை போற்றுங்கள்.
* கடவுளை ஆராயக் கூடாது. நம்பிக்கை, ஆழ்ந்த அன்பு இருந்தால் அவரை அடையலாம்.
* எங்கும் நிறைந்த தெய்வீகத்தை காண்பதற்காகவே கண்கள் நமக்கு வழங்கப்பட்டுள்ளன.
தைரியமூட்டுகிறார் சாய்பாபா