ADDED : நவ 09, 2020 09:35 AM

நவ.7 - வாரியார் நினைவு தினம்
* உடனடி தீர்வு கிடைக்க கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள்.
*உண்மையைப் பேசுங்கள். தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள்.
* மகிழ்ச்சிக்கான மந்திரச்சாவி நம் மனதில் இருக்கிறது.
* முதுமைக்கு தேவையானதை இளமையில் தேட வேண்டும்.
* குருநாதரை தெய்வமாக கருதுங்கள்.
* மாசு இல்லாத மனமே கடவுள் குடியிருக்கும் கோயில்.
* கடவுளை அன்புடன் வணங்குங்கள். அவரிடம் வியாபாரம் செய்யாதீர்கள்.
* மலர்ந்த முகத்துடன் அனைவரிடமும் பழகுங்கள்.
* தர்மவழியில் செலவழித்த பணம், வழிபாட்டில் செலவழித்த நேரம் இரண்டும் நம்முடையது.
* மானம் காக்கும் ஆடை போல மனதைக் காக்க வழிபாடு அவசியம்.
* பெற்றோரை விட சிறந்தவர் உலகில் யாருமில்லை.
* பெரியவர்களை வணங்காவிட்டாலும், அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது.
* காலையில் எழும் போது, உணவு உண்ணும் போது, படுக்கும் போதும் கடவுளை நினையுங்கள்.
* மனிதனின் வாழ்க்கை வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* இந்த பிறவியில் செய்யும் நன்மை, தீமைகளை அடுத்த பிறப்பில் அனுபவிக்க நேரிடும்.
* உறவினர் கைவிடலாம். ஆனால் தானமும், தர்மமும் கைவிடுவதில்லை.
* பயிருக்கு முள்வேலி போல் நம் பணத்திற்கு தர்மமே வேலி.
வழிகாட்டுகிறார் வாரியார்