ADDED : ஏப் 24, 2021 01:42 PM

ஏப்.25 - மகாவீர் ஜெயந்தி
* மன்னிப்பது கோழைத்தனம் அல்ல. அது தைரியத்தால் அலங்கரிக்கப்பட்ட மாலை.
* மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வதே உண்மையான வீரம்.
* சுதந்திரமாக வாழும் உரிமை எல்லா உயிர்களுக்கும் உண்டு.
* நாம் செய்யும் எந்த செயலும் நற்செயலாக இருப்பது அவசியம்.
* சுயக்கட்டுப்பாடும் அமைதியும் தான் ஆன்மிக வெற்றிக்கு வழிவகுக்கும்.
* தேவைக்கு அதிகமாக சேர்த்த செல்வம் பயனற்றுப் போகும்.
* பிறர் எப்படி நடக்க ஆசைப்படுகிறீர்களோ நீங்களும் அப்படியே இருங்கள்.
* தீய எண்ணங்களே அத்தனை துயரங்களுக்கும் காரணம்.
* ஏமாற்றுதல் என்பது சிறிய முள், அதைப் பிடுங்கி எறிவது கடினம்.
* உண்மையின் பாதையில் நடப்பவருக்கு உபதேசம் தேவையில்லை.
* அகந்தை அழிந்தால் அடக்கம் தானாக வரும்.
* கொல்லாமை, ஒழுக்கம் இரண்டும் அறத்தின் ஆணிவேர்.
* பிறருக்கு மனமுவந்து கொடுப்பவர்கள் சொர்க்கம் செல்வர்.
* தியானத்தால் மனம் துாய்மையாகும்.
* தியான பயிற்சியால் துன்பக்கடலை எளிதாக கடக்கலாம்.
மறுக்கிறார் மகாவீரர்