sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வாழ்க்கை உயர...

/

வாழ்க்கை உயர...

வாழ்க்கை உயர...

வாழ்க்கை உயர...


ADDED : ஆக 26, 2019 10:03 AM

Google News

ADDED : ஆக 26, 2019 10:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை இருந்தால் நம் வாழ்க்கை உயரும்.

* அலட்சியத்துடன் பணி யாற்றுவது கூடாது. யாரையும் இழிவாகக் கருதுவது கூடாது.

* செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

* கடமையில் மட்டும் கவனம் செலுத்தாதே. பக்தியில் கவனம் வை.

* பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

* எதையும் எதிர்பார்க்காமல் கடவுளைச் சரணடைவதே மேலான பக்தி.

* அன்பளிப்பு கொடுத்தால் மட்டும் போதாது! பக்தியும் வேண்டும்.

* குறைகளை மட்டும் கடவுளிடம் முறையிடாதே! நன்றி செலுத்துவதும் அவசியம்.

* சுவாமிக்கு நைவேத்யம், காணிக்கை செலுத்துவது நன்றியுணர்வின் வெளிப்பாடு.

* 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே மனித வாழ்வின் குறிக்கோள்.

* தர்மத்தை முறையாக பின்பற்றினால் நிம்மதியுடன் வாழலாம்.

*சமூக சேவை, கடவுள் தொண்டை விட குடும்பத்துக்கு செய்யும் கடமையே முக்கியம்.

* நல்ல பெயர் பெறுவதற்காக சமூக சேவையில் ஈடுபாடு காட்டுவது குற்றம்.

* கருணை என்பது ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டிய சிறந்த பண்பு.

* கட்டாயப்படுத்தி ஒருவரிடம் வேலை வாங்குவதில் பெருமை உண்டாவதில்லை.

* கல்வி கற்றதன் பயன் அதை நாலு பேருக்காவது கற்றுத் தர வேண்டும்.

* அன்னதானத்தை விட கல்விக்காக செலவழிப்பது உயர்ந்தது.

* வாரம் ஒருமுறை மவுன விரதம் இருந்தால் மனம் துாய்மை பெறும்.

* இன்பமோ, துன்பமோ அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்






      Dinamalar
      Follow us