ADDED : ஜூலை 28, 2017 10:22 AM

* மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சீரான ஓய்வு என வாழ்வை அமைத்துக் கொண்டால் நோயின்றி நூறாண்டு காலம் வாழலாம்.
* மனதில் உறுதியும், ஒழுங்கும் உருவாகி விட்டால் நினைத்த செயல் எல்லாம் அப்படியே நிறைவேறும்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அதை அறிய நினைத்தால் அடங்கத் தொடங்கி விடும்.
* கோபம் வரும் போது உடலிலுள்ள ஜீவகாந்த சக்தி வேகமாக வெளியேறுகிறது. இதனால் உடல், மனம் பாதிக்கப்படுகிறது.
* தேவையான நேரத்தில் பிறர் மீது கோபம் வருவது போல் நடிக்கலாம். ஆனால் மனதில் சிறு சலனம் கூட ஏற்படக்கூடாது.
* திறமையின்மை, பயத்தால் மனக்கவலை அதிகரிக்கிறது. முறையான பயிற்சி, முயற்சி இருந்தால் திருத்திக் கொள்ள முடியும்.
* தீர்க்க முடியாத துன்பம் என்று உலகில் ஏதுமில்லை. இதை அறியாத மனிதர்களே துன்பத்தில் உழல்கிறார்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் 'வாழ்க வளமுடன்' என்று உலகம் முழுவதையும் மனதார நினைத்து வாழ்த்துங்கள். இதனால் எங்கும் மகிழ்ச்சியும், அமைதியும் பரவும்.
வாழ்த்துகிறார் வேதாத்ரி மகரிஷி

