ADDED : செப் 29, 2017 11:48 AM

* பொய் பேசுவதால் மனிதன் பழிக்கு ஆளாக நேரிடும். ஆனால், உண்மை பேசுபவனோ என்றும் புகழுடன் வாழ்வான்.
* விவேகம் என்னும் நல்லறிவு யாருக்கும் எளிதில் உண்டாவதில்லை.
* மனதில் அச்சம் தலை தூக்கி நிற்கும் வரை, மனிதன் அடிமையாக வாழ வேண்டியிருக்கும். * தன்னம்பிக்கை இல்லாதவன் புதிய முயற்சியில் ஈடுபட தயங்குவான்.
* போதும் என்ற மனம் படைத்தவன் திருப்தியாக வாழ்வதோடு, பிறர் நலனிலும் அக்கறை கொள்வான்.
* பேராசை படைத்தவன் உலகையே பரிசளித்தால் கூட திருப்தி பெற மாட்டான்.
* கூட்டு முயற்சியால் கிடைத்த பொருளை, கூட்டாளிகளுக்கும் சமபங்கு பகிர்ந்து கொடுங்கள்.
* தேவைக்கு மேல் கிடைத்த பணத்தை சேமிப்பதை விட, தேவையுள்ளவனுக்கு கொடுங்கள்.
* விருப்பம் போல வாழ்நாளை நீட்டிக்க முடியாது. இதில் இயன்ற நல்லதைச் செய்யுங்கள்.
வழிகாட்டுகிறார் மகாவீரர்