
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெண்கள் நம் கண்கள். சமூக கவுரவத்தின் அடையாளமாக திகழும் அவர்களை காப்பது நம் கடமை.
* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும், பிறரது பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே சிறந்த மனிதன்.
* விரோத மனப்பான்மை இல்லாதவன் எதைச் செய்தாலும் அது தடையின்றி நிறைவேறும்.
* பிறருக்குப் போதிப்பதை விட, தன்னைப் பண்படுத்த முயற்சிப்பதே நற்பண்பு.
* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர்.
* பிறப்பால் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். அனைவரும் ஒரே குலம். நம் அனைவரின் உடலிலும் ஓடுவது சிவப்பு ரத்தமே.
* நல்லெண்ணம், அன்பு, நேர்மை, மனத்தூய்மை, கருணை ஆகிய நற்குணங்கள் வாழ்விற்கு அவசியமானவை.
* பிறர் மீது நூறு குறைகளை சொல்வது எளிது. ஆனால், நம்முடைய ஒரு குறையைப் போக்குவது கடினமானது.
அறிவுறுத்துகிறார் புத்தர்