sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

/

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்


ADDED : மே 27, 2018 04:36 PM

Google News

ADDED : மே 27, 2018 04:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறப்பது தெய்வத்தன்மை.

* உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

* கடவுளின் இருப்பிடமான மனதை துாய்மையாக வைப்பது நம் கடமை.

* உடம்பு துாய்மையாக இருந்தால் போதாது, உள்ளமும் இருக்க வேண்டும். அதற்கு கடவுளின் திருவடியை எப்போதும் சிந்திக்க வேண்டும்.

* கடலைத் தேடி ஓடும் நதி போல, காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும் ஊசி போல ஆழ்ந்த பக்தியில் ஈடுபடுங்கள்.

* கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக் கொள்ள முயல வேண்டும்.

* கடவுள் எல்லோரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே அவரை வணங்குங்கள்.

* தாயாகிய பூமி, நமது விருப்பம் அனைத்தையும் அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்.

* பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.

* எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.

* தியானம் செய்தால் பாவம் நீங்கும். நல்ல செயலில் ஈடுபடும் மனநிலை உருவாகும்.

* நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.

* குறுக்கிடும் கஷ்டத்தை எண்ணிக் கலங்க வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.

* மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்தே உண்டாகிறது.

* எளிமை, உழைப்பு இரண்டும் மனிதனை மனநிறைவோடு வாழ வழிகாட்டும் நற்பண்புகள்.

* ஆசையால் கோபம் உண்டாகிறது. அது பாவம் செய்யத் துாண்டுகிறது.

* பிறருடைய குற்றத்தை அன்பினால் திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.

* தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

வழிகாட்டுகிறார் காஞ்சிப்பெரியவர்






      Dinamalar
      Follow us