sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மேற்கு நோக்கிய மணக்கோல சிவன்

/

மேற்கு நோக்கிய மணக்கோல சிவன்

மேற்கு நோக்கிய மணக்கோல சிவன்

மேற்கு நோக்கிய மணக்கோல சிவன்


ADDED : மே 25, 2017 11:22 AM

Google News

ADDED : மே 25, 2017 11:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுந்தரருக்கு அருள்புரிந்த சிவன், கடலூர் அருகிலுள்ள திருத்தளூரில் சிஷ்டகுருநாதேஸ்வரராக வீற்றிருக்கிறார். மணக்கோலம் கொண்ட இவர் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு.

தல வரலாறு: கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த போது, அகத்தியர் தென்திசைக்கு வந்தார். வழியில் அவர் பல தலங்களில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். அவர் இத்தலத்திற்கு வந்த போது சிவனின் திருமணத்தை காண விரும்பி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அகத்தியருக்கு சிவன் மணக்கோலத்தில் காட்சியளித்தார். இங்குள்ள சிவன் மேற்கு பார்த்தும், அம்பிகை சிவலோக நாயகி வடக்கு நோக்கியும் இருக்கிறாள். மேற்கு பார்த்த சிவனுக்கு சக்தி அதிகம். அம்பிகை பொதுவாக கிழக்கு அல்லது தெற்கு நோக்கி இருப்பாள். வடக்கு நோக்கி

அம்பிகையை அபூர்வமாகவே அமைப்பர். இது குபேரதிசை என்பதால் இவளை வணங்கி செல்வவளத்தைப் பெறலாம்.

குருவாக வந்த சிவன்: சுந்தரர் இத்தலத்திற்கு சென்ற போது தென்பெண்ணையாற்றில் வெள்ளம் ஓடியது. எனவே கரையில் இருந்த படியே, மறுகரையில் இருந்த சிவனை நோக்கி தேவாரம் பாடினார். அப்போது அங்கு ஒரு வயதான தம்பதி வந்தனர். அவர்கள் சுந்தரரை படகில் ஏற்றிக் கொண்டு மறு கரைக்கு சென்றனர். அங்கு சிவன் இல்லை.

சுந்தரரின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். அப்போது முதியவர் அவரிடம், 'நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்,' என்று சொல்லி விட்டு மறைந்தார்.

சுந்தரர் மேலே பார்த்த போது சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். முதியவர்களாக வந்தது சிவபார்வதி என்பதை அறிந்த சுந்தரர், தனக்கு உபதேசிக்க வேண்டினார்.

சிவனும் குருவாக இருந்து தவநெறிகளை உபதேசம் செய்தார். இதனடிப்படையில், 'தவநெறி ஆளுடையார், சிஷ்டகுரு நாதேஸ்வரர்' என பெயர்கள் வந்தன. கல்வியில் சிறக்கவும், சிறந்த கல்லூரியில் விரும்பிய படிப்பில் சேரவும் வியாழனன்று வழிபடுகின்றனர்.

சிறப்பம்சம்: இங்கு முருகன் ஆறுமுகத்துடன் இருக்கிறார். ஆதிகேசவர் தெற்கு நோக்கி இருக்கிறார். சுந்தரர் செங்கோலுடன் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே சுந்தரருக்கு காட்சி தந்த சிவன் சிற்பம் உள்ளது. பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், பைரவர், சூரிய லிங்கம், ராமலிங்கம், பீமலிங்கம், சூரியபகவான், ஆதிகேசவ பக்தவச்சலர், கஜலட்சுமி ஆகியோர் இருக்கின்றனர். தல விருட்சமாக கொன்றை மரமும், தீர்த்தமாக சூரிய புஷ்கரணி உள்ளது. கோவிலுக்கு எதிரே முதியவர் வடிவில் வந்த சிவனுக்கு தடுத்தாட்கொண்ட ஈஸ்வரர் சன்னதியும், அஷ்டபுஜ காளி சன்னதியும்

உள்ளது. கோவில் எதிரில் மெய்கண்டாரின் சீடரான அருணந்தி சிவாச்சாரியார் முக்தியடைந்த இடம் இருக்கிறது.

எப்படி செல்வது: கடலூரில் இருந்து 24 கி.மீ.,யில் பண்ருட்டி. அங்கிருந்து 8 கி.மீ.,

நேரம்: காலை 6.00 - 10.00 மணி; மாலை 5.00 - 8.00 மணி

தொடர்புக்கு: 94448 07393; 04142 - 248 498






      Dinamalar
      Follow us