ADDED : ஜன 23, 2020 03:10 PM

* உற்றார், உறவினரிடம் அன்புடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டாகும்.
* பிறரைக் குற்றம் சொல்லி பழகி விட்டால் உறவினர்கள் நம்மை விரும்ப மாட்டார்கள்.
* சிவபெருமானை வழிபடுவதே சிறந்த தவம்.
* குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்த பண்பாகும்.
* ஊருடன் ஒத்து போகாமல் பகை கொள்பவன் குடும்பத்துடன் அழிவான்.
* நல்லறிவு உள்ளவர்களுக்கு யாரிடமும் கோபம், பகை உண்டாகாது.
* ஊருக்கு உழைப்பவனாக இருங்கள், யாரிடமும் கடிந்து பேசாதீர்கள்.
* நல்லவர்களுடன் உறவு கொண்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
* வறுமையில் வாடுபவர்களை இழிந்த வார்த்தைகள் சொல்லி ஏளனம் செய்யாதீர்கள்.
* பிறருக்கு முற்பகலில் தீமை செய்தால், அதுவே பிற்பகலில் நமக்கு பெருந்தீங்காக முடியும்.
* கூரிய அம்பு போல் திறமை இருந்தாலும் தற்பெருமை கொண்டு பேசாதீர்கள்.
* இல்லற வாழ்வே சிறந்தது. இதை விட உயர்ந்த தர்மம் வேறில்லை.
* முதன் முதலில் நாம் அறிந்த கடவுள்கள் தாயும், தந்தையும் தான்.
* ஒருவன் தன் பரம்பரையைக் காத்திட மனைவியோடு கூடிக் குழந்தைப்பேறுடன் வாழ்வதே சிறப்பு.
* நெருங்கிய நண்பனிடம் கூட, ஒருவன் தன் வறுமையை சொல்வது கூடாது.
* பிறரது மனம் வருந்தும் விதத்தில் பேசுவதோ, செயல்படவோ வேண்டாம்.
சொல்கிறார் அவ்வையார்