sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மனமே... ஓ மனமே நீ மாறிவிடு! மலையோ அது பனியோ நீ மோதி விடு!

/

மனமே... ஓ மனமே நீ மாறிவிடு! மலையோ அது பனியோ நீ மோதி விடு!

மனமே... ஓ மனமே நீ மாறிவிடு! மலையோ அது பனியோ நீ மோதி விடு!

மனமே... ஓ மனமே நீ மாறிவிடு! மலையோ அது பனியோ நீ மோதி விடு!


ADDED : ஜூன் 29, 2018 11:54 AM

Google News

ADDED : ஜூன் 29, 2018 11:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தோல்வியை கண்டு மனம் தளராதீர்கள். ஆயிரம் முறை வழுக்கி விழுந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு போதும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.

* சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாக கையாளாமல் போனதே காரணம்.

* தீண்டாமையை கொள்கையாகவும், உணவை தெய்வமாகவும் கருதும் வரை ஆன்மிகத்தில் முன்னேற முடியாது.

* பொறாமையை மட்டும் நீக்கிப் பாருங்கள், நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

* சுயநலம் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே உலகிற்கு தேவை.

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

* உடலையும் மனதையும் பலவீனப்படுத்தும் எதையும் அணுகக் கூடாது.

* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது மிகப் பெரிய பாவம்.

* மனதை உயர்ந்த லட்சியங்களால் நிரப்பு. அதிலிருந்து நற்செயல்கள் மட்டுமே விளையும்.

* சுயநலமில்லாமல் இருப்பதும், சுயநலத்துடன் இருப்பதும் தான் கடவுளுக்கும் சாத்தானுக்கும் உள்ள வித்தியாசம்.

* எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.

* நீ இப்போது இருக்கும் நிலைக்கு நீ மட்டுமே பொறுப்பு.

* சோம்பேறித்தனம் எந்த வழியில் வந்தாலும் அதை துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு 'எதிர்ப்பது' என்பது பொருள்.

* பகை, பொறாமையை எவ்வளவு வெளிப்படுத்துகிறோமோ, அதை விட பன்மடங்கு பெருகி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பும்.

* பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால் மகத்தான செயல்களை செய்ய முடியாது.

* வெற்றியை மட்டுமே சந்தித்தவன் இதயம் பூ போல மென்மையானது. தோல்வியை மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.

* இதயம் சொல்வதை மட்டுமே செய். வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு.

* நீ பட்ட துன்பத்தை விட அதில் பெறும் அனுபவ பாடத்திற்கு முக்கியத்துவம் கொடு.

* உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறப்பது கூடாது.

* பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் யாரையும் வாழ விடாது; உண்மையோ சாக விடாது.

* கீழ்ப்படியக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்தடையும்.

* எந்த குடும்பத்தில் பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அங்குள்ளவர்களின் முன்னேற்றம் தடைபடும்.

கட்டளையிடுகிறார் வீரத்துறவி






      Dinamalar
      Follow us