sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

மாலை தேவையில்லை மனசு தான் தேவை

/

மாலை தேவையில்லை மனசு தான் தேவை

மாலை தேவையில்லை மனசு தான் தேவை

மாலை தேவையில்லை மனசு தான் தேவை


ADDED : ஏப் 01, 2018 04:39 PM

Google News

ADDED : ஏப் 01, 2018 04:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பெரிய மாலை கடவுளுக்கு தேவை இல்லை. ஒரு பூவை மனத் துாய்மையுடன் காலடியில் வைத்தாலும் அன்புடன் ஏற்பார்.

* எங்கிருந்தாலும் உடன் இருப்பவருக்கு மகிழ்ச்சி தருபவரே பண்பு மிக்கவர். ஒருவர் சென்ற பிறகே மற்றவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் அவர் பண்பற்றவர்.

* மனமே கடவுளின் இருப்பிடம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவரின் அருளால் தான் வாழ்க்கை சக்கரம் இயங்குகிறது.

* தினமும் தியானம் செய்வதால் மனம் பக்குவம் பெறும். துன்பம் நேரும் போது சமாளிக்கும் வல்லமை உண்டாகும்.

* லாபம் என மக்கள் கருதுபவை ஆன்மிகத்தில் கிடைக்காமல் போகலாம். ஆனால், ஆன்மிகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றதில் கிடைப்பதில்லை.

* உள்ளத்தில் நிறைவு இருந்தால் உடலில் ஏற்படும் துன்பங்கள் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.

* மனிதர்கள் செய்யும் சமூகத்தொண்டு பெரிதாக தோன்றலாம். ஆனால், ஞானிகள் உலக நன்மைக்காக செய்யும் பிரார்த்தனையின் சக்தி அளப்பரியது.

* எல்லா உயிர்களிடத்திலும் கடவுளை காணும் பாக்கியம் பெற்றவனே உண்மையான பக்தன்.

* விரதம் இருப்பதால் உடல், மனம் துாய்மையடைகின்றன. அப்போது கடவுளுக்காக கண் விழிப்பதோ, பட்டினி கிடப்பதோ சிரமமாக இருக்காது.

சீர்படுத்துகிறார் சின்மயானந்தர்






      Dinamalar
      Follow us