/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
/
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
எந்த வியர்வைக்கும் வெற்றிகள் பேர் வைக்குமே! உன்னை உள்ளத்தில் ஊர் வைக்குமே!
ADDED : ஏப் 15, 2013 03:37 PM

* ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, வெற்றி இவற்றை வழங்கவல்ல பேரொளியாக இறைவன் இருக்கிறான். அந்தப் பேரொளியை நோக்கி திரும்புங்கள்.
* உண்மையான வெற்றி என்பது உங்களை நீங்களே வெல்வதில் தான் இருக்கிறது. தன்னை வென்றவன், இயற்கையின் மீது கூட, ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலைப் பெறுகிறான்.
* வாழ்வில் சந்திக்கும் துன்பம், சோதனை இவற்றால் மனநிலை பாதிக்கும். இருந்தாலும் விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள். தோல்விக் கான காரணத்தை அறிந்து அதை திருத்த முயலுங்கள்.
* தோழனே! ஒரு செயலில் வெற்றி பெற முடியாதோ என எண்ணாதே. முன்வந்து பார். உன்னால் நிச்சயம் வெல்ல முடியும்! வியர்வை சிந்தி பாடுபட்டால் வெற்றி உறுதி. எத்தனை முறை தோற்றாலும் முயற்சியைக் கைவிடாதவனே உண்மையான வெற்றியாளன். அவனை உள்ளத்தில் உலகம் வைக்கும்.
* <உங்களை மற்றவர்களோடு அழகு, செல்வம், பலம் இவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். இதனால் பொறாமை உணர்வு வளர்கிறது என்ற உண்மையை உணருங்கள்.
* நீங்கள் என்னவாக இருந்தாலும் அதைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். உங்களுடைய தனித்தன்மை உலகில் வேறு யாருக்குமில்லை. நீங்கள் இறைவனின் ஒப்பற்ற படைப்பு.
* உங்களிடமுள்ள நல்ல, கெட்ட எண்ணங்கள் இரண்டையும் கவனிக்கத் தொடங்குங்கள். மனம் என்னும் வயலில் தீயஎண்ணம் என்னும் களைகளைப் பிடுங்கி எறியுங்கள். நல்ல எண்ணம் என்னும் பயிரை மட்டும் வளர விடுங்கள்.
* ஒருபோதும் உங்களுடைய குறைபாடுகளைக் கண்டு மனம் தளராதீர்கள். மனம் தளரும்போது தோல்வி மனப்பான்மை உருவாகி விடுகிறது. இதற்கு இடமளிக்கக் கூடாது.
* எந்த ஒரு விஷயத்திலும் பேச்சளவில் இது தான் குறிக்கோள் என்று வேகமாகத் தீர்மானிக்கிறோம். ஆனால், அதற்கான முயற்சியில் இறங்கும்போது தயங்குகிறோம்.
* ''இன்று விட்டுவிடலாம். நாளை பார்த்துக் கொள்வோம்'' என்று ஒருபோதும் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். ஊக்கத்துடன் செயல்படுவதில் வெற்றி அடங்கியிருக்கிறது.
* மற்றவர்கள் உங்களுக்கு எதிராக என்ன கூறினாலும் பொருட்படுத்த வேண்டாம். இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் அவனோடு இருக்கிறீர்கள். மற்றதைப் பற்றி என்ன கவலை?
* நீங்கள் பிறரால் அச்சுறுத்தப்படும்போது, அமைதியை சிறிதும் இழக்காதீர்கள். இந்தநிலையை எட்டிவிட்டால் நம்மிடம் இருக்கும் 'தான்' என்ற அகந்தை உணர்வை வெற்றி பெற்றுவிட்டதாகப் பொருள்.
* இறைவன் உலகில் ஒரு குறிப்பிட்ட பணிக்காகவே உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
* வேலையின் காரணமாக இறைவனையோ அல்லது இறைவனுக்காக வேலையையோ புறக்கணிக்காதீர்கள். இறைவனை மகிழ்விப்பதற்காக பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்துடன் வேலை செய்யுங்கள்.
பரமஹம்ச யோகானந்தர் புத்தாண்டு முழக்கம்