
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளின் பிள்ளைகளான நாம் அனைவரும் ஒரே குலம். இதில் ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது.
* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே நிலையானவர்.
* நற்குணம் கொண்டவர்கள் கர்வம் கொள்ள வேண்டாம். உங்களை விட நல்லவர்கள் உலகில் இருக்கிறார்கள்.
* பிறரை இழிவாக கருதுபவன், தன் நிலையில் இருந்து தாழ்ந்து வருந்த நேரிடும்.
* அறிவாளிக்கு பிறர் மீது பொறாமையோ, பொருள் ஆசையோ ஏற்படாது.
* பிறரது குறையை சிந்திப்பவன் பாவி. தன்னை உணர்ந்து மகிழ்பவன் ஞானி.
* பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தர்மம் செய்யக்கூடாது. மனித நேயத்துடன் உதவ வேண்டும்.
* கடவுளை பற்றிக் கொண்டால் வாழ்வில் வெற்றி உறுதி.
* பொன், மண், பெண், புகழ் ஆசைகளில் சிக்கியவர்கள் அதிலிருந்து எளிதில் மீள முடியாது.
ஒன்றுபடுத்துகிறார் சாந்தானந்தர்