ADDED : நவ 03, 2017 09:44 AM

* வெளியுலகத்திற்கு தெரியாது என எண்ணி யாருக்கும் துரோகம் செய்யாதே. மனசாட்சிக்கு மதிப்பு கொடு. வாழ்வில் நிம்மதி காண்பாய்.
* தாயை நம்பும் குழந்தை போல, மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால் அவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
* கீழான ஆசைகள் மனதில் எழுவதை எண்ணி வருந்த வேண்டாம். கடவுளைச் சரணடைய பலவீனமான எண்ணத்தில் இருந்து விடுபட வேண்டும்.
* படகு தண்ணீரில் இருக்கலாம். ஆனால் தண்ணீர் படகில் இருக்க கூடாது. அது போல உலகில் வாழ்ந்தாலும், ஆசைகள் மனதிற்குள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* வீட்டில் குடியிருப்பவன் விழிப்பாக இருந்தால், திருடன் நுழைய முடியாது. அதுபோல புத்தி தெளிவுடன் இருந்தால், மனதிற்குள் தீய எண்ணம் நுழைய
முடியாது.
* கோபத்தில் அறிவு, தன்னை திரையிட்டு மறைத்துக் கொள்வதால் நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறன் இல்லாமல் போகும்.
சொல்கிறார் ராமகிருஷ்ணர்