ADDED : மார் 27, 2021 04:36 PM

மார்ச் 28 - நினைவு நாள்
* வாழ்க வளமுடன் என ஒருவரை ஒருவர் வாழ்த்தினால் பலவீனம் நீங்கி வளர்ச்சிக்கான கதவு திறக்கும்.
* பேச்சிலும் நடத்தையிலும் பண்பற்ற வார்த்தைகளையோ, தேவையற்ற மிடுக்கையோ காட்ட வேண்டாம்.
* பிரச்னை வரும் போது பிறர் முதலில் இறங்கி வரட்டும் என எண்ணாமல் நீங்களே பேச்சை துவக்குங்கள்.
* பிறருக்கு தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களிடம் எல்லா விஷயங்களையும் சொல்லாதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும் அன்பாக பேசவும் கூட நேரம் இல்லாதது போல் நடக்காதீர்கள்.
* நீங்கள் கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் ஏற்காதீர்கள். ஆலோசித்த பிறகு முடிவு செய்யுங்கள்.
* அடிக்கடி நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்து கர்வப்படாதீர்கள்.
* மற்றவர் எண்ணம், பேச்சு, செயல்களை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
* உண்மை எது, பொய் எது என விசாரிக்காமல் வதந்திகளை பரப்பாதீர்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று பிறரிடம் வாதம் செய்யாதீர்கள்.
* நீங்கள் முடியவே முடியாது என நினைத்ததை ஒருவன் செய்வான் அல்லது செய்து கொண்டிருப்பான்.
* உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
வாழ்த்தச் சொல்கிறார் வேதாத்ரி