sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

தீர்க்க சுமங்கலி பவ

/

தீர்க்க சுமங்கலி பவ

தீர்க்க சுமங்கலி பவ

தீர்க்க சுமங்கலி பவ


ADDED : மார் 18, 2021 04:58 PM

Google News

ADDED : மார் 18, 2021 04:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரடையான் நோன்பு - மார்ச் 14

கயிறு கட்ட நல்ல நேரம்: மாலை 5:25 - 5:35 மணி

பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்வது காரடையான் நோன்பு. சாவித்திரியை வழிபடுவதால் இதற்கு 'சாவித்திரி விரதம்' என்றும் பெயருண்டு. இந்நாளில் தான் சத்தியவானை எமனின் பிடியில் இருந்து மீட்டாள் சாவித்திரி. இதனடிப்படையில் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி சுமங்கலிகள் விரதமிருப்பர்.

விரதமிருக்கப் போறீங்களா...

சுமங்கலிகள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிந்து கொள்வர். கணவர் அல்லது வயது முதிர்ந்த சுமங்கலிகளின் கைகளால் சரடு அணிவது சிறப்பு. திருமணம் ஆகாத கன்னியர் சரடு கட்டிக் கொள்ள நல்ல மணவாழ்வு அமையும்.

விரதமிருப்பவர்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து இனிப்பு, உப்பு அடைகள் செய்வர். அடையோடு உருகாத வெண்ணெய்யை படைத்து வழிபடுவர். குடும்பத்திலுள்ள பெண்கள் ஒன்றாக அமர்ந்து வெண்ணெய் சேர்த்து அடை சாப்பிட வேண்டும். பசுக்களுக்கு இதை சாப்பிடக் கொடுப்பது மிக அவசியம். அப்போது தான் நோன்பு முழுமை பெறும். இந்த விரதம் மேற்கொள்ளும் வழக்கம் இல்லாதவர்கள் கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டபின், மஞ்சள் சரடைக் கட்டிக் கொள்ளலாம்.

கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்

தோரம் கிருஷ்ணாமி சுபகே!

ஸஹாரித்ரம் தராமி அஹம்!

பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!

ஸூப்ரீதா பவ ஸர்வதா!

'ஓரடையும், உருகாத வெண்ணையும் நான் படைத்தேன்; ஒருநாளும் என் கணவனைப் பிரியாமல் இருக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us