sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

ஓடி ஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!!

/

ஓடி ஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!!

ஓடி ஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!!

ஓடி ஓடி உழைக்கணும்! ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!!


ADDED : ஜூன் 15, 2017 12:29 PM

Google News

ADDED : ஜூன் 15, 2017 12:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஓடியாடி உழைத்து வாழ்வதே கடவுள் விரும்பும் வழிபாடு. உழைப்பில் கிடைத்த பணத்தை உழைக்க முடியாதவர்களுக்கு கொடுங்கள். வருமானத்தில், பத்து சதவீதம் வரை பிறருக்காகச் செலவழிக்கலாம்.

* கடந்த காலம் பற்றி வருந்தாதீர்கள். நிகழ்காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி வாழப் பழகுங்கள்.

* நட்பு, கருணை, மகிழ்ச்சி, மனத்தூய்மை, பொறுமை, விடாமுயற்சி போன்ற தெய்வீகப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். மனதில் எப்போதும் அமைதி குடியிருப்பதை உணர்வீர்கள்.

* தனியாக ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி, ஓம் என்னும் மந்திரத்தை ஜெபியுங்கள். எண்ண ஓட்டத்தை சாட்சியாக இருந்து கவனியுங்கள். இதன் மூலம் மனம் பலம் பெறும்.

* எளிய உணவை மிதமான அளவில் சாப்பிடுங்கள். சாப்பிடும் முன் கடவுளுக்கு படைத்து வழிபடுங்கள். உணவில் பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாரம் ஒரு வேளை விரதமிருப்பது அவசியம்.

* அனைவரிடமும் திறந்த மனதுடன் பழகுங்கள். உண்மையைப் பேசுங்கள். தேவைப்படும் போது பேசாமலும் இருங்கள்.

* பொறுமை கடலினும் பெரியது. கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். மற்றவர் குறைகளை மறக்க முயலுங்கள்.

* தேவைகளைக் குறைத்து, இருப்பதில் திருப்தி காணுங்கள். எளிய வாழ்க்கையும், உயர்ந்த சிந்தனையும் லட்சியமாக இருக்க வேண்டும்.

* வேலைக்காரர்களை நம்பி காத்திருக்க வேண்டாம். சுய தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யுங்கள்.

* மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். யாருடைய உணர்ச்சியையும் புண்படுத்தக்கூடாது.

* மகான்களின் வாழ்க்கை வரலாறு, உபதேசங்களைப் படித்து, அதை வாழ்வில் கடைபிடிப்பதே அவர்களுக்குச் செய்யும் மரியாதை.

* பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் தூய்மை பேணுங்கள்.

* சுயநலம் மறந்து பிறருக்கு இயன்ற அளவில் உதவுங்கள்.

* தத்துவம் கேட்பதை விட, பயனுள்ள ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தியானம், யோகப்பயிற்சியில் ஈடுபடுவதை அன்றாடக் கடமையாக கொள்ள வேண்டும்.

* உணவு மிதமாகவும், எளிதில் ஜீரணமாகும் விதத்திலும் இருக்க வேண்டும். காரம், புளிப்பு குறைப்பது நல்லது.

* பிறருக்கு நல்லதை எண்ணுவதும், செய்வதும் மட்டுமே ஆன்மிகம். மனதில் சிறிதும் ஆணவம் கூடாது.

* உலகத்தை உங்களின் குடும்பமாகக் கருதுங்கள். உள்ளதைப் பிறருக்கு பங்கிட்டுக் கொடுங்கள். எல்லா உயிர்களையும் நேசிப்பதோடு, மானசீகமாகவும் வழிபடுங்கள்.

* தினமும் நாள்குறிப்பு எழுதுங்கள். கடமையில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதீர்கள்.

* எந்நிலையிலும் உண்மை பேசுங்கள். கொஞ்சமாகவும், இனிமையாகவும் பேசப் பழகுங்கள்.

* கிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதையில் தினமும் ஒரு அத்யாயம் படியுங்கள்.

சொல்கிறார் சிவானந்தர்






      Dinamalar
      Follow us