ADDED : செப் 01, 2017 09:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செப்.5 ஆசிரியர் தினம்
* ஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை அனைவருக்கும் ஆன்மிக விஷயங்களை போதிப்பது மிக அவசியம்.
* அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனம். ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம்.
* அறிவு நூல்களை கரைத்து குடித்திருந்தாலும், ஆன்மிக அறிவு இல்லாவிட்டால் அனைத்தும் வீணாகி விடும்.
* இதயப்பூர்வமாக கடவுளைத் தேட வேண்டியது மனிதனின் அடிப்படை கடமை.
* சுயநலம் இல்லாமல் பிறருக்கு சேவை செய்தால் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.
* மனிதனின் குணத்தை உருவாக்குவதில், உணவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
* சில நேரத்தில் பேசுவதைக் காட்டிலும், மவுனம் காப்பது மிகுந்த நன்மையளிக்கும்.
* வெளியில் தெரியும் வறுமையை விட, மனத்தில் இருக்கும் வறுமையே அபாயமானது.
சொல்கிறார் ராதாகிருஷ்ணன்